தமிழகம்

பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்​கலை. உறுப்​புக் கல்​லூரி​கள் மற்​றும் மண்டல வளாகங்​கள் தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஜெய்​சன், ராஜ்கு​மார், கோசலை ஆகியோர், சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்​கலை.யின் 13 உறுப்​புக் ​கல்லூரி​கள் மற்​றும் 3 மண்டல வளாகங்​களில் 328 தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் 10,15 ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலை​யில் அதன்​பிறகு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இதனால், நாங்​களும் எங்​கள் குடும்​பத்​தினரும் நிராதர​வாக நிற்​கிறோம். எங்​களில் பெரும்​பாலானோர் பிஎச்டி பட்​டம் பெற்​றவர்​கள்.

          

மாணவர்களின் கல்வி பாதிப்பு

பணி​வாய்ப்பு இல்லை என்று பல்​கலைக்​கழக நிர்​வாகம் காரணம் சொல்​கிறது.ஆனால், ஏஐசிடிஇ விதி​முறைப்​படி,தற்​போது படித்து வரும் 22,230 மாணவர்​களுக்கு 1,112 உதவி பேராசிரியர்​கள் தேவை. ஆனால், வெறும் 667 நிரந்தர ஆசிரியர்​களே தற்​போது உள்​ளனர்.

எங்​களை நீக்​கி​விட்​ட​தால் மாணவர்​கள் குறிப்​பாக கிராமப்​புற மாணவர்​களின் கல்வி கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. எங்​களுக்கு தொடர்ந்து பணிநீட்​டிப்பு வழங்க வேண்​டும் என்று கோரி பிப்​ர​வரி​யில் 2 கட்​டங்​களாக தொடர் போராட்​டங்​கள் நடத்​தினோம்.

ஆனால், எங்​களின் கோரிக்​கையை தமிழக முதல்​வரின் கவனத்​துக்கு உயர்​கல்​வித் துறை அதி​காரி​கள் கொண்​டு​ போக​வில்​லை. எனவே எங்​களது கோரிக்கையை உடனடியாக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT