தமிழகம்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல்: 12 சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநிலங்​களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்​தேர்​தலில் 12 சுயேச்​சைகளின் மனுக்​கள் தள்​ளு​படி செய்யப்பட்டன.

தமிழகத்​தில் நடந்​து​முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முகவைச் சேர்ந்த சி.​வி.சண்​முகம் மயிலம் தொகு​தி​யில் வெற்​றி​பெற்​றார். இதையடுத்து அவர் ஏற்​கெனவே வகித்​து​வந்த மாநிலங்​களவை எம்​.பி. பதவியை ராஜி​னாமா செய்​தார். அதைத்​தொடர்ந்​து, இந்த காலி​யிடத்​துக்​கான இடைத்​தேர்​தல் ஜூன் 18-ல் நடக்கிறது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி​யுடன் நிறைவு பெற்​றது.

இத்​தேர்​தலில் போட்​டி​யிட தவெக ஆதர​வில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த பிர​வீன் சக்​ர​வர்த்தி மற்​றும் 12 சுயேச்சை வேட்​பாளர்​கள் என மொத்​தம் 13 பேர் வேட்​புமனுத் தாக்​கல் செய்​தனர். அந்த மனுக்​கள் மீதான பரிசீலனை நேற்று நடை​பெற்​றது. மாநிலங்​களவை உறுப்​பினர் பதவிக்கு போட்​டி​யிடும் வேட்​பாளர்​களுக்கு 10 எம்​எல்​ஏக்​கள் முன்​மொழிவு கடிதம் இருக்க வேண்​டும். அந்​தவகை​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் பிர​வீன் சக்​ர​வர்த்​தி​யைத் தவிர மற்ற யாருக்​கும் முன்​மொழிவு கடிதம் இல்​லை. இதனால் 12 சுயேச்சை வேட்​பாளர்​களின் மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​டன. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பிர​வீன் சக்​ர​வர்த்​திபோட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​படு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT