சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்: 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முடிவு

பெண்கள், குழந்தைகள் பயமின்றி வாழும் சூழலை ஏற்படுத்த உறுதி
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான இலட்சினையை (லோகோ) முதல்வர் விஜய் வெளியிட்டார். அதை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐஜி பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். உடன் தலைமைச் செயலர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால். படம்: ம.பிரபு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான இலட்சினையை (லோகோ) முதல்வர் விஜய் வெளியிட்டார். அதை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐஜி பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். உடன் தலைமைச் செயலர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால். படம்: ம.பிரபு

Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் பாது​காப்பை மேம்​படுத்த, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்​வர் விஜய் நேற்று தொடங்கி வைத்​தார். இந்​தத் திட்​டத்தின் கீழ் 2,500 புதிய பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட உள்ளன. பெண்கள், குழந்தைகள் பயமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.

தமிழகத்​தில் தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ராக பொறுப்​பேற்றவுடன் 3 கோப்​பு​களில் கையெழுத்​திட்​டார். அவற்​றில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை திட்​ட​மும் ஒன்​று. பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில் அறிவிக்​கப்​பட்ட இந்த அதிரடிப் படை​யின் தொடக்க விழா சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று நடந்தது.

முதல்​வர் விஜய், சிங்​கப்​ பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்​தைத் தொடங்கி வைத்​தார். பின்​னர் இந்தப் படை​யின் ரோந்து வாக​னங்​களின் அணிவகுப்பு நடந்​தது. ஒரு ரோந்து வாக​னத்தை முதல்​வர் விஜய் ஓட்டினார். பின்​னர் விழா​வில் முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: நம்​முடைய பாட்​டி, அம்​மா, அக்​கா, தங்​கைகள், பெண் குழந்​தைகள் பாது​காப்பை உறுதி செய்​வோம் என்று சொன்​னோம். அது தேர்​தலுக்​காக மட்​டும் சொன்​னது கிடை​யாது. உணர்​வுப்​பூர்​வ​மாக சொன்​னது. பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​கள் விஷ​யத்​தில், நமக்கு எப்​போதும் ஜீரோ டாலர்ன்​ஸ்​தான். அதில் மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறோம்.

தமிழகத்​தில் இருக்​கும் பெண்​கள், பெண் குழந்​தைகள் எல்​லோரும் பாது​காப்​பாக, தன்​னம்​பிக்​கை​யுடன் இருக்க வேண்​டும். பெண்​களைப் பற்றி சில செய்​தி​களைக் கேட்​கும் போது, உண்​மை​யிலேயே மனது பதறுகிறது. கண் கலங்​கு​கிறது. பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் ஏன் நடக்​கிறது என்​பதை ஆய்வு செய்து பார்க்​கும் போது, அது ஒரே இடத்​தில்​தான் வந்து நிற்​கிறது. அது போதைப் பொருள் நடமாட்​டம். அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்​டும். பல ஆண்​டு​களாக இப்​பிரச்​சினையைக் கண்​டு​கொள்​ளாமல் விட்​டதன் விளை​வால், வேர் ஆழமாக பரவி இருக்​கிறது. இதை கண்​டு​கொள்​ளாமல் விட்​ட​வர்​கள் யார் என்​பது நான் சொல்லி தெரிய வேண்​டிய​தில்​லை.

போதைப் பொருள் நடமாட்​டம், பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​கள், சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை இந்த மூன்​றும் ஒன்​றுடன் ஒன்று தொடர்​புடைய​வை. இதை எப்​படி சரி செய்ய போகிறோம் என்​பது​தான் முக்​கி​யம். அதே நேரம், பெண்​கள், பெண் குழந்​தைகளுக்​கான பாது​காப்பு என்​பது சட்​டம் ஒழுங்கு சம்​பந்​தப்​பட்​டது மட்​டும்​தானா என்​றால், இல்​லை. இதில் சமூக ஒழுங்​கும், தனி மனித ஒழுங்​கும் சம்​பந்​தப்​பட்​டுள்​ளது. எனவே தனி மனிதன் ஒழுக்​க​மாக இருந்​தாலே அந்​தச் சமூகம் தன்​னாலே மாறும். ஒரு கட்​டுப்​பாட்​டோடு, பொறுப்​பாக இருந்​தாலே பல பிரச்​சினை​களைக் கட்​டுப்​படுத்​தலாம்.

படிக்​கும் இடங்​கள், வேலை செய்​யும் இடங்​கள், பயணங்​களின் போது, தினசரி வாழ்க்​கை​யில் பயமின்றி பெண்​கள் மரி​யாதையோடு வாழும் சூழலை உரு​வாக்க வேண்​டும். அது​தான் நமது முதல் குறிக்​கோள். பெண்​களுக்​குத் தொந்​தரவு கொடுப்​பது யாராக இருந்​தா​லும் அதை சகித்​துக் கொள்ள முடி​யாது. அவர்​கள் மீதான நடவடிக்​கைகள் போலீஸ் துறை​யில் இருந்து கடுமை​யாக இருக்​கும். குற்​றப்​பத்​திரிகை மிக விரை​வில் தாக்​கல் செய்​யப்​படும். ஆனால் இதில் நிரப​ரா​தி​கள் யாரும் தண்​டிக்​கப்​படக் கூடாது என்​பதை அதி​காரி​கள் மனதில் கொள்ள வேண்​டும்.

இந்த சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படைக்​காக முதல் கட்​ட​மாக ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்​கப்பட உள்​ளது. இந்த படைக்கு மட்​டும் 2,500 புதிய பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​படும். ஏற்​கெனவே, பெண்​கள் பாது​காப்​புக்​காகச் செயல்​படும் அமைப்​பு​களுக்​குக் கூடு​தல் பலமாகச் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்​படும். பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடக்​கும் முன்​பாகவே அதை தடுக்​கும் நடவடிக்​கை​களில் இந்த படை முக்​கிய பங்கு வகிக்​கும்.

களப்​பணி, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் இந்​தப் படை ஈடு​படு​வ​தால் அனைத்து மகளிர் போலீஸ் நிலை​யங்​களில் வழக்கு விசா​ரணை​யிலும், குற்​ற​வாளி​களுக்​குத் தண்​டனை வாங்கி கொடுப்​ப​தி​லும் இன்​னும் அதி​கம் கவனம் செலுத்த முடி​யும். பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்க இந்​தி​யா​விலேயே முதல்​முறை​யாக டிரோன் ரோந்து முறை அறி​முகப்​படுத்​தப்​படும்.

ஓர் அரசின் தொலைநோக்கு பார்வை மற்​றும் குறிக்​கோள் இருந்​தாலே போதும், போகிற பாதை சரி​யாக இருக்​கும் என்று சொல்​வார்​கள். ஓர் அரசின் முதல் வெற்றி அந்த மாநிலத்​தின் பெண்​களும், குழந்​தைகளும் மரி​யாதை​யாக வாழ்​கிறார்​களா என்​ப​தில்​தான் இருக்​கிறது. அதனுடன் சேர்ந்​தது​தான் மற்ற எல்லா வளர்ச்​சி​யும். அதி​லும் முழு கவனம் செலுத்​து​வோம். இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார்.

டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் முதல்​வருக்கு நினை​வுப் பரிசு வழங்​கினார். நிகழ்ச்​சி​யில்​ தலை​மைச்​ செயலர்​ மு.​சாய்​ குமார்​, சென்​னை காவல்​ ஆணை​யர்​ அமல்​ராஜ் உட்​பட பலர்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான இலட்சினையை (லோகோ) முதல்வர் விஜய் வெளியிட்டார். அதை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐஜி பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். உடன் தலைமைச் செயலர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால். படம்: ம.பிரபு</p></div>
“ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும்” - சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in