அமைச்சர் ராஜ்மோகன் |கோப்புப் படம் 

 
தமிழகம்

சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து மக்களின் கருத்தை கேட்ட பிறகே முடிவு: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: சட்​டப்​பேர​வைக்கு புதிய கட்​டிடம் கட்​டு​வது குறித்து மக்​களின் கருத்தை கேட்ட பிறகே முடி​வெடுப்​போம் என தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: மக்​களுக்கு யார் நல்​லது செய்​வது என்​ப​தில் ஆரோக்​கிய​மான போட்டி இருக்கவேண்​டும். மின்​வெட்​டு, அரி​வாள் வெட்டு என்று அரசி​யலுக்​காக முன்​னாள் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​யுள்​ளார்.

மக்​கள் பணி​யில்தான் நாங்​கள் போட்டி போடு​கிறோம். சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சி​யினர் அனை​வரும் பேசுவதற்​கான வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. திமுகவைச் சேர்ந்த ஓ.பன்​னீர்​செல்​வம் சுமார் ஒரு மணி நேரம் பேசி​னார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 40 நிமிடங்​களுக்கு மேல் பேசி​னார். பாமகவைச் சேர்ந்த சவுமியா அன்​புமணி​யும் நீண்ட நேரம் பேசி​னார். அனை​வருக்​குமே வாய்ப்பு கொடுக்​கப்​படு​கிறது.

முதல்​வர் விஜய் சட்​டப்​பேர​வை​யில் பேசும்​போது திமுக​வினர் தொடர்ந்து குறுக்​கீடு செய்​தனர். அதற்கு முதல்​வர் அளித்த பதிலடியைத்​தான் அனை​வரும் பார்த்​தனர். சட்​டப்​பேரவை நடவடிக்​கைகள் குறித்து அறிந்​து​கொள்ள மக்​களிடையே ஆர்​வம் அதி​கரித்​துள்​ளது. கூட்​டணிக் கட்​சிகளுக்கு அமைச்​சர​வை​யில் திமுக பங்கு கொடுக்​க​வில்​லை. ஆனால் தவெக ஆட்​சி​யிலும், அதி​காரத்​தி​லும் பங்கு அளித்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் கூட்​டம் அதி​க​மாக இருக்​கிறது. எனவே புதிய சட்​டப்​பேரவை கட்​டிடம் தேவை​தான். இருப்​பினும் இதுகுறித்து மக்​களின் கருத்​தைக் கேட்டு முடி​வெடுப்​போம். இறுதி முடிவை முதல்​வர் எடுப்​பார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் வயதில் பெரிய​வர். அவர் தெரிவிக்​கும் விமர்​சனங்​களை ஆக்​கப்​பூர்​வ​மாக ஏற்​றுக்​கொள்​கிறோம். பேச்​சுக் குறைவு, செயல் அதி​கம். அதுவே தவெக அணுகு​முறையாகும். நாங்​கள் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்​டிருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT