தமிழகம்

சென்னை கோட்டத்தில் ஓர் ஆண்டில் ஆதரவின்றி தவித்த 556 பேர் மீட்பு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில்வே வளாகத்​தில், கடந்த ஓர் ஆண்​டில் கைவிடப்​பட்ட அல்​லது ஆதரவின்றி தவித்த 556 பயணி​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: கடந்த நிதி​யாண்​டில் (2025-26), சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் நிலை​யங்​கள், ரயில்வே வளாகத்​தில் ஆதர​வின்றி தவித்த மற்​றும் கைவிடப்​பட்ட 227 பெண்​கள் உள்பட 556 பயணி​களை ஆர்​பிஎஃப் போலீ​ஸார் மீட்​டனர்.

இதில் சிறு​வர்​கள், முதி​ய​வர்​களும் அடங்​கு​வர். சிறு​வர், சிறுமியர்​களை குழந்​தைகள் நல உதவி மையங்​களி​லும், பெரிய​வர்​களை தொண்டு நிறு​வனங்​களி​லும் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

‘ஆப்​ரேஷன் சேவா’ கீழ், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பல்​வேறு ரயில்​களில் பயணத்​தின் போது, உடல் நலம் பாதிக்​கப்​பட்ட 1,125 பயணி​களுக்கு முதலுதவி அளித்​து, போதிய மருத்​துவ உதவி கிடைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, ‘ஆப்​ரேஷன் மாத்​ருசக்​தி’ கீழ், ரயில்​களில் பயணத்​தின் போதோ, ரயில் வளாகத்​திலோ பிரசவ வலி​யால் துடித்த 8 கர்ப்​பிணி பெண்​களுக்கு தேவை​யான மருத்​துவ உதவி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அதேபோல், பயணி​கள் தவற​விட்ட ரூ.4.36 கோடி மதிப்​பிலான சொத்​துக்களை மீட்​டு, உரிய​வர்​களிடம் ஒப்​படைக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.

SCROLL FOR NEXT