தமிழகம்

3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: புதுச்​சேரி- மரக்​காணம் இடையி​லான பகு​தி​யைக் கடந்த தீவிர தாழ்​வுப் பகு​தி​யால் சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இன்று மிக கனமழை பெய்​யும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: தீவிர காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி புதுச்​சேரிக்கு தெற்கு பகு​தி​யில் உள்ள மாவட்​டங்​கள் ஊடாக தெற்​கு, தென்​மேற்கு திசை​யில் நகரும்.

இது இன்று (டிச.3) முதல் 3 நாட்​களுக்கு டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் அதையொட்​டி​யுள்ள உள் மாவட்​டங்​கள் நோக்கி நகர்ந்​து, சாதாரண தாழ்​வுப் பகு​தி​யாகவோ அல்​லது ஒரு காற்று சுழற்​சி​யாகவோ செயலிழந்​து, டெல்டா, தென் மாவட்​டங்​கள் ஊடாக அரபிக்​கடலை நோக்கி நகரும்.

இதன் காரண​மாக சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இன்று அதி​காலை மற்​றும் காலை நேரங்​களில் மீண்​டும் அதி​கனமழை பெய்​யும்.

ந.செல்வகுமார்

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தை​விட சென்​னைக்கு சற்று கூடு​தலாக​வும், அதை​விட திரு​வள்​ளூர் மாவட்​டத்​துக்கு இன்​னும் சற்று கூடு​தலாக​வும் மழைப்​பொழிவு இருக்​கும். வட உள்​மாவட்​டங்​களி​லும் மித​மானது முதல் கனமழை பெய்​யும்.

மேலும் வரும் 4, 5-ம் தேதி களில் டெல்டா மாவட்​டங்​கள், தென் மாவட்​டங்​கள், உள் மாவட்​டங்​கள் என அனைத்து மாவட்​டங்​களி​லும் பரவலாக மழை பெய்​யும்.

வரும் 6,7-ம் தேதி​களில் புதிய காற்று சுழற்​சி​யொன்று வட இலங்கை வந்​து, தமிழகத்​தில் மழைப்​பொழி​வைத் தீவிரப்​படுத்​தும். இது இலங்​கைக்கு மீண்​டும் அச்​சுறுத்​தலை கொடுக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT