தமிழகம்

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார்.

இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து மெல்ல நகரும் டிட்வா புயல் இன்று (நவ.29) டெல்டா பகு​தி​யில் செயலிழக்​கும்.

இன்​றும், நாளை​யும் டெல்டா மாவட்ட கடற்கரையையொட்டி சில மணி நேரம் நீடித்​து, பிறகு மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து நாளை புதுச்​சேரி- மாமல்​லபுரம் இடையே மேலும் செயலிழந்து கரையை கடக்​கும்.

இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, சிவகங்​கை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை, திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர், கடலூர் மாவட்​டங்​களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்​றும் மிக கனமழை பெய்​யும்.

அதே​போல, இன்று முதல் டிச.1 வரை சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணாமலை, ராணிப்​பேட்​டை, புதுச்​சேரி மாவட்​டங்​களி​லும் 48 மணி நேர தொடர் கனமழை இருக்​கும்.

டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்​டம் வரை கடலோரப் பகு​தி​களில் பாதிப்​பு​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, வேலூர் மாவட்​டங்​களி​லும் பாதிப்பு இருக்​கும்.

தூத்​துக்​குடி, விருதுநகர், மதுரை, திண்​டுக்​கல், கரூர், நாமக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி மாவட்​டங்​களின் கிழக்​குப் பகு​தி​கள் மற்​றும் திருப்​பத்​தூரிலும் கனமழை இருக்​கும். மேற்கு மாவட்​டங்​களில் மித​மானது முதல் சற்று கனமழை ஆங்​​காங்கே இருக்​கும்.

இந்த தாழ்வு மண்​டலம் டெல்டா பகு​தி​களில் கடற்​கரைக்கு மிக நெருக்​க​மாக நகர்ந்து வட கடலோரத்தை அடை​யும் என்​ப​தால் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்​தில், அனைத்து கடலோர மாவட்​டங்​களி​லும் நாளை வரை மித​மான காற்று வீசும். இவ்​​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT