பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்

 
தமிழகம்

“தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சிதான்” - பிரேமலதா விளக்கம்

செய்திப்பிரிவு

“தமிழகத்​தில் தேமு​திக அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக இருப்​ப​தால்​தான் 10 தொகு​தி​களி​லும் முரசு சின்​னத்​தில் போட்​டி​யிடு​கிறது” என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 10 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. தேமு​திக வேட்​பாளர்​கள் பட்​டியலை அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்ட நிலை​யில், வேட்​பாளர்​கள் அனை​வரும் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக அலு​வல​கத்​தில் அமைந்​துள்ள விஜய்​காந்த நினை​விடத்​தில் வழி​பாடு நடத்​தினர். பின்​னர், திமுக தலைமை அலு​வல​க​மான அறி​வால​யம் சென்று முதல்​வர் ஸ்டா​லினிடம் பிரேமல​தா​வும் தேமு​திக வேட்​பாளர்​களும் வாழ்த்து பெற்​றனர்.

          

செய்​தி​யாளர்​களுக்கு பிரேமலதா அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: எங்​கள் கூட்​டணி 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வெற்றி பெறு​வது உறு​தி. முதலமைச்​சர் ஸ்டா​லின் அவர்​கள் மீண்​டும் ஆட்சி அமைப்​பார். நாங்​கள் மிக விரை​வில் வேட்​புமனு தாக்​கல் செய்ய இருக்​கிறோம். அதன்​பிறகு அந்​தந்த தொகு​தி​களுக்​குச் சென்று தேர்​தல் களப்​பணி​யைத் தீவிரப்​படுத்த உள்​ளோம்.

கூட்​ட​ணி​யின் வெற்​றிக்​காக எங்​களின் தேர்​தல் அறிக்​கையை மக்​களிடம் கொண்டு செல்​வோம். வழக்​க​மாக அனைத்து தேர்​தல்​களி​லும் தமிழகம் முழு​வதும் நான் தீவிரப் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வேன். ஆனால், இந்த முறை நானே வேட்​பாள​ராகக் களம் காண்​ப​தா​லும், தேமு​திக சார்​பில் 10 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வ​தா​லும், எங்கு பிரச்​சா​ரம் செய்​வது என்​பது குறித்து விரை​வில் முடிவு செய்து அறி​விப்​பேன்.

எங்​களை அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்சி என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சொல்​கிறார். தமிழகத்​தில் மூன்​றாவது அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக தேமு​திக திகழ்​கிறது. அதனால்​தான் 10 தொகு​தி​களி​லும் எங்​களது சொந்த ‘முரசு’ சின்​னத்​திலேயே போட்​டி​யிடு​கிறோம். பிறகு, பழனி​சாமி ஏன் எங்​களை அங்​கீ​காரம் இல்​லாத கட்சி என்று சொல்கிறார் எனத் தெரிய​வில்​லை. அதற்​கான பதிலை அவரிடம்​தான் நீங்​கள் கேட்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT