தமிழகம்

கடலில் இருந்து ஜெல்லி மீன்கள் புகுந்ததால் கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

பராமரிப்பு பணிக்குப்பின் மீண்டும் மின் உற்பத்தி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்​டம் கூடங்​குளம் 2-வது அணு உலைக்​குள் ஜெல்லி மீன்​கள் புகுந்​த​தால் மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டது. ஒரு நாள் பராமரிப்பு பணிக்​குப்​பின் மீண்​டும் மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டது.

கூடங்​குளத்​தில் மன்​னார் வளை​குடா கடலை ஒட்​டி, தலா ஆயிரம் மெகா​வாட் உற்​பத்தி திறன் கொண்ட முதல் மற்​றும் 2-வது அணு உலைகளில் மின் உற்​பத்தி நடை​பெற்று வரு​கிறது. இந்த 2 அணுஉலைகளில் இருந்​தும் தலா 562 மெகா​வாட் மின்​சா​ரம் தமிழகத்​துக்கு கிடைக்​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை 6 மணி​யள​வில், 2-வது அணு உலை​யில் மின் உற்​பத்தி திடீரென்று நிறுத்​தப்​பட்​டது. அங்கு ஆய்வு செய்தபோது அணு உலைக்​குள் ஜெல்லி மீன்​கள் கூட்​டம் கூட்​ட​மாக புகுந்​திருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து அதி​காரி​கள், தொழில்​நுட்ப வல்​லுநர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினர். அணு உலையை நிறுத்தி ஜெல்லி மீன்​களை வெளி​யேற்​றும் பணி நடை​பெற்​றது. அதன்​பின்​னர் பராமரிப்பு பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. ஒரு நாளுக்​குப்​பின் நேற்று மீண்​டும் மின் உற்​பத்தி தொடங்​கியது.

இதுகுறித்​து, அணுமின் ​நிலைய அலுவலர்கள் கூறும்​போது, “அணு உலைக்கு கடலில் இருந்து பிரத்​யேக குழாய்​கள் மூலம் கடல் நீர் கொண்​டு​வரப்​படு​கிறது. கடல்​நீரை வடிகட்​டி, அணு உலைக்கு அனுப்ப, வலை போன்ற அமைப்பு ஏற்​படுத்​தப்பட்​டுள்​ளது.

ஆனாலும், அதை​யும் கடந்து ஈரப்பத பிரிப்​பான் வடி​கால் அமைப்​பில் ஜெல்லி மீன்​கள் புகுந்​து​விட்​டன. ஜெல்லி மீன்​கள் கூட்​டம் கூட்​ட​மாக புகுந்​த​தால் மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டது. அவற்றை அகற்​றி​விட்டு மீண்​டும் மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டது” என தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT