கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி

ரொக்கப் பரிசு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்​டைதாரர்களுக்கு பொங்​கல் பரிசுத் தொகுப்​பாக அரிசி, சர்க்​கரை, முழு நீள கரும்பு வழங்க ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது. மேலும் பொங்​கல் ரொக்​கப்பரிசு தொடர்​பாக விரைவில் அறிவிப்பு வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு, ஆண்​டு​தோறும் அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு பொங்​கல் பரிசுத் தொகுப்​பாக தலா ஒரு கிலோ பச்​சரிசி, சர்க்​கரை மற்​றும் ஒரு முழு கரும்பு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரு​வ​தால் ரொக்​கப்பரிசு வழங்​கப்​படும் என்ற எதிர்​பார்ப்பு உள்ளது.இதற்​கிடை​யில், பொங்​கல் பரிசை ரூ.5 ஆயிர​மாக தர வேண்​டும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

பெரும் எதிர்​பார்ப்பு உள்​ள​தால், ரொக்​கத் தொகை தொடர்​பான ஆலோ​சனை​கள் அரசு தரப்​பில் நடை​பெற்​றாலும், முழு வடிவம் பெற​வில்​லை. இதுகுறித்​து, ஜன.6-ம் தேதி நடை​பெறும் அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் முடி​வெடுக்​கப்​படலாம் எனத் தெரி​கிறது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​கள் மற்​றும் இலங்​கைத் தமிழர் முகாம்​களில் வசிக்​கும் குடும்​பத்​தினர் என 2 கோடியே 22 லட்​சத்து 91,710 குடும்ப அட்​டைகளுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்​க்கரை மற்​றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகிய​வற்​றை பரிசுத் தொகுப்பாக வநியோகிக்க ரூ.248 கோடியே 66 லட்​சத்து 17,959 கோடி செலவு ஏற்​படும் என கணிக்​கப்​பட்டு நிதி ஒதுக்​கீடு செய்வதற்​கான அரசாணையை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

அந்த அரசாணை​யில், ஒரு கிலோ அரிசி ரூ.25-க்கும், சர்க்​கரை ரூ.48.55-க்கும், ஒரு கரும்பு தோராய​மாக ரூ.38-க்​கும் கொள்​முதல் செய்​யும் வகை​யில் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுத​விர பொங்​கல் தொகுப்​புக்​கான டோக்​கன் விநி​யோகம் குறித்து கூட்​டுறவு சங்​கங்​களின் பதி​வாளர் அறி​வுறுத்​தல்​களை வெளி​யிட்​டுள்​ளார்.

மண்​டலங்​களில் செயல்​படும் நியாய​விலைக் கடைகளு​டன் இணைக்​கப்​பட்​டுள்ள குடும்ப அட்​டைகளுக்கு ஏற்ப ஜன.2-ம் தேதிக்​குள் டோக்​கன்​கள் அச்​சிடப்​பட்டு விநி​யோகத்​துக்கு தயார் நிலை​யில் வைக்க வேண்​டும். குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு சுழற்சி முறை​யில் பொங்​கல் தொகுப்பு வழங்க ஏது​வாக குடும்ப அட்​டைகள், பிரிக்​கப்​பட்டு தெரு​வாரி​யாக பராமரிக்​கப்பட வேண்​டும். அதன் அடிப்​படை​யில் பரிசுத்​தொகுப்பு பெற வேண்​டிய நாள், நேரம் குறிப்​பிட்டு டோக்​கன்களை விற்​பனையாளர்​கள் குடும்ப அட்​டை​தா​ரர்​களின் வீடு​களில் வழங்க வேண்​டும்.

இந்த டோக்​கன்​களை எக்​காரணம் கொண்​டும் நியாய​விலைக் கடையை சாராத வேறு நபர்​கள் அரசி​யல் சார்ந்த நபர்​களை கெண்டு விநி​யோகிக்​கக் கூடாது என்​பது உள்​ளிட்ட பல்​வேறு அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்​கும் குடும்ப அட்​டைகளுக்கு வழங்க வேண்​டிய வேட்​டி, சேலை உள்​ளிட்ட தொகுப்பு பொருட்​கள் அனைத்​தும் அனுப்​பப்​பட்டு தயார் நிலை​யில்​ இருக்​க அறி​வுறுத்​த​ப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT