வெள்ளிமலையில் உள்ள வாக்குச்சாவடி.

 
தமிழகம்

ஆண்டிபட்டி தொகுதியில் வெள்ளிமலை வனக்கிராமத்தில் வசிக்கும் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வெள்ளி மலை வனக் கிராமத்​தில் உள்ள ஐந்தே வாக்​காளர்களுக்காக வாக்குச்சாடி மையம் அமைக்கப்படவுள்ளது.

இவர்​கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டி தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக - கேரள எல்​லை​யில் தேனி மாவட்​டம் அமைந்​துள்​ளது. இங்​குள்ள ஆண்டிபட்டி தொகுதி மேற்​குத் தொடர்ச்சி மலை​யடி​வாரம் வரை நீண்​டுள்​ளது.

          

குறிப்​பாக க.ம​யிலை ஒன்​றி​யத்​தில் தும்​மக்​குண்டு ஊராட் சிக்கு உட்​பட்ட வெள்​ளிமலை வனக் கிராமம் இந்த தொகு​தி​யின் கடைசி பகு​தி​யாக உள்​ளது. இங்கு காபி, கிராம்​பு, ஏலக்​காய் எஸ்​டேட்​டு​கள் அதி​கம் உள்​ளன.

தொடக்​கத்​தில் தமிழக தொழிலா​ளர்​கள் இங்கு அதி​கம் பணிபுரிந்​தனர். 1990-ம் ஆண்டு கால​கட்​டத்​தில் 1,200 வாக்​காளர்​கள் வரை இருந்​தனர். இங்கு பதி​வாகும் வாக்​கு​களே தும்​மக்​குண்டு ஊராட்​சித் தலை​வரை நிர்​ண​யம் செய்​யும் அளவுக்கு சக்​தி​வாய்ந்த வாக்​காளர்​ எண்ணிக்கை இருந்​தது.

இந்​நிலை​யில் இப்​பகுதி புலிகள் காப்​பக​மாக அறிவிக்​கப் பட்​ட​தால் வனத்​துறை​யினரின் நெருக்​கடி அதி​கரித்​தது. இதனால் இப்​பகு​தி​யைச் சேர்ந்த விவ​சா​யிகள் பலரும் படிப்​படி​யாக இடம்பெயரத் தொடங்​கினர்.

மேலும் தேயிலைத் தோட்​டங்​களுக்கு வடமாநிலங்​களைச் சேர்ந்த தொழிலா​ளர்​களும் அதிகஅள​வில் வரத் தொடங்​கினர். இதனால் இங்​குள்ள வாக்​காளர்​களின் எண்​ணிக்கை குறைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்​தலில் 6 ஆக மாறியது.

இந்​நிலை​யில் எஸ்​ஐஆர் பணி​யின்​போது இரட்​டைப் பதிவை காரணம் காட்டி ஒரு வாக்​காளரின் பெயர் நீக்​கப்​பட்​டது. இதனால் வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 5 ஆக குறைந்​தது.

இருப்​பினும், அவர்​கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்​றும் வகை​யில், இங்​குள்ள அரசு உதவி பெறும் ஆரம்​பப் பள்​ளி​யில் வாக்​குச் சாவடி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து இங்​குள்ள விவ​சா​யிகள் கூறும்போது, 5 ஆண்​டு​களுக்கு முன்பு இப்​பகுதி புலிகள் காப்பக பகு​தி​யாக அறிவிக்​கப்​பட்​டது. அதில் இருந்தே வனத்​துறை​யினர் பல்​வேறு நெருக்​கடிகளை ஏற்​படுத்​தி​ய​தால், விவ​சா​யிகள் பலரும் இடம்​பெயரத் தொடங்​கினர்.

மேலும் வடமாநிலத் தொழிலா​ளர்​கள் வருகை அதி​கரிப்​பால் காபி தோட்​டத்​தில் பணிபுரிந்​தவர்களும் வெளி​யேறி விட்டனர். வெள்​ளிமலை​யில் இருந்து 12 கி.மீ. தூரத்​தில் இப்பகுதிக்​கான வாக்​குச்​சாவடி மையம் உள்​ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையே வெளி​யாட்​கள் இங்கு வர அனு​ம​திக்​கப்​படு​வர் என்​றனர்.

இதுகுறித்து ஆட்​சி​யர் ரஞ்​ஜீத்​சிங் கூறும்போது, அங்கு பணிபுரிபவர்​கள் பெரும்​பாலும் வெளி மாநிலத் தொழிலா​ளர்​கள்​தான். அவர்​களுக்கு இங்கு வாக்குரிமை இல்​லை.

அங்கு 5 பேருக்கு மட்​டுமே வாக்கு உள்​ள​தால் அவர்​கள் வாக்​களிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றார். ஒரு​காலத்​தில் எம்​ஜிஆர், ஜெயலலிதா போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற தொகுதி ஆண்டிபட்டி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT