டெல்லி சிபிஐ முன்பு செந்தில்பாலாஜி இன்று ஆஜர்

டெல்லி சிபிஐ முன்பு செந்தில்பாலாஜி இன்று ஆஜர்
Updated on
1 min read

கரூர்: கரூரில் கடந்​தாண்டு செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தவெக தலை​வர் விஜய் 3 முறை டெல்லி சிபிஐ அலு​வலத்​தில் ஆஜரா​னார்.

இதே​போல, கரூர் சம்​பவத்​தின்​போது மருத்​து​வ​மனைக்கு அன்று இரவே சென்​றிருந்த முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார்.

இதனால், அவரிட​மும் விசா​ரணை நடத்த முடிவு செய்த சிபிஐ அதி​காரி​கள், அவரை மார்ச் 17-ம் தேதி டெல்லி அலு​வல​கத்​தில் ஆஜராக சம்​மன் அனுப்பி இருந்​தனர். அதன்​படி, விசா​ரணைக்கு ஆஜராக அவர் நேற்று சென்​னையி​லிருந்து வி​மானம் மூலம் டெல்​லி புறப்​பட்டுச் சென்றார்.

டெல்லி சிபிஐ முன்பு செந்தில்பாலாஜி இன்று ஆஜர்
சாகித்ய அகாடமி விருது அறிவிப்புக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in