தமிழகம்

ரயில்வேயில் பணியாளர்களை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே துறை​யில் பணி​யாளர்​களை குறைக்​கும் முடிவை கைவிட வேண்​டும் என மத்​திய அரசுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​திய ரயில்​வே​யில் 2 சதவீதம் (29,608) பணி​யிடங்​களை குறைக்​கும் பாஜக அரசின் அராஜக​போக்கு கண்​டனத்​துக்​குரியது. மக்​களுக்​கான ரயில்வே துறை​யில் இது​போன்ற அறி​விப்​பு​களை ஒரு​போதும் ஏற்​றுக் கொள்​ள​முடி​யாது.

இதனால், தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1906 பணி​யிடங்​கள் பாதிக்​கப்​படும். ஏற்​கெனவே பணி​யாளர் பற்​றாக்​குறை நிலவிக் கொண்​டிருக்​கும் நிலை​யில், இந்த நடவடிக்கை மீத​முள்ள ஊழியர்​களின் பணிச்​சுமையை அதி​கரிக்​கும்.

வந்தே பாரத், அம்​ரித் பாரத் போன்ற நவீன ரயில்​கள் அறி​முகம் செய்து வரும் சூழலில், பணி​யாளர்​களை குறைப்​பது ரயில் சேவை​யின் தரத்​தை​யும், பயணி​களின் பாது​காப்​பை​யும் கேள்விக்​குறி​யாக்​கும்.

இது ரயில்வே துறை​யில் தனி​யார் மயமாக்​கலை ஊக்​குவிக்​கும் முயற்​சி​யாகும். எனவே, இந்த பணி​யிடக் குறைப்பு முடிவை உடனடி​யாக மத்​திய அரசு கைவிட வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இந்​திய ரயில்​வே​யில் 2 சதவீத பணி​யாளர்​களை ரயில்வே நிர்​வாகம் குறைக்க முடிவு செய்​திருப்​பது தொழிலா​ளர் விரோத​போக்​காகும். இந்​தி​யா​வில் நாள் தோறும் 22 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

அதற்​கேற்ப புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​கி, பணி​யாளர்​களை நியமிப்​ப​தற்கு பதிலாக, பணி குறைப்பு மேற்​கொள்​வது என்​பது சரியல்ல. இந்​தி​யா​வின் முதன்​மை​யான பிரச்​சினை வேலை​யில்லா திண்​டாட்​டம்.

அதை போக்​கு​வ​தில் கவனம் செலுத்​தாத மத்​திய அரசு, ஆட்​குறைப்பு நடவடிக்​கை​யில் ஈடு​படு​வது, இளைய தலை​முறை​யினரின் நலன்​களுக்​கும், பொருளா​தார வளர்ச்​சிக்​கும் எதி​ரானது.

தி.க. தலை​வர் கி.வீரமணி: ரயில்வே துறை​யில் 2 சதவீத பணி​யிட குறைப்பு என்​பது தனி​யார் மயமாக்​கலின் முன்​னெடுப்பே ஆகும். தனி​யார் மயமாக்​கல் என்​பதும், பணி​யிடக் குறைப்பு என்​பதும் சமூகநீதி அடிப்​படை​யில் மிகப்​பெரிய ஆபத்​தாகும்.

இந்த நடவடிக்கை அனைத்து அரசு துறை​களி​லும் இதே போல் ஆட்​குறைப்பு செய்​வதற்​கான தொடக்​கமே ஆகும். இதை தொழிற்​சங்​கங்​களும், சமூகநீதி உணர்​வாளர்​களும் இணைந்து தொடக்​கத்​திலேயே தடுத்து நிறுத்த வேண்​டும்.

மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் ஜவாஹிருல்​லா: ஆண்​டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று தேர்​தல் நேரத்​தில் அறி​வித்​து​விட்​டு, இருக்​கின்ற வேலைகளை குறைக்​கும் பணி​களை முன்​னெடுப்​பது மத்​திய பாஜக அரசின் உண்மை முகத்தை வெளிச்​சம் போட்டு காட்​டு​கிறது.

ஏற்​கெனவே, பணி​யாளர்​கள் பற்​றாக்​குறை நிலவி வரும் சூழலில் ரயில்​வே​யில் ஆட்​குறைப்பு வேலைகளை செய்​வதை தவிர்த்​து, கூடு​தலாக பணி​யாளர்​களை நியமிக்​க மத்​தி​ய அரசு நடவடிக்​கை எடு​க்​க வேண்​டும்​.

SCROLL FOR NEXT