தமிழகம்

மாம்​பழத்து ஊரின் ‘அருள் பெற்றவருக்​கு’ ஆளும் தரப்பில் இன்வைட் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘பழக்’ கட்சி அப்​பா​வும், பிள்​ளை​யும் மீண்​டும் ஒன்​றான​தில் கட்சி ‘சொந்தங்​கள்’ தரப்​பில் பலரும் நிம்​ம​தி​யாய் இருக்​கிறார்​கள். தேர்தலுக்கு முன்பே இது நடந்​திருக்​கலாம் என அவர்​களில் பலரும் ஆதங்​கப்​பட்டு வரும் நிலை​யில், தம்​பி​யும், அப்​பா​வும் மீண்​டும் கைகுலுக்​கிய​தில் ‘மதி’ மகளுக்கு இன்​ன​மும் ஆதங்​கம் தீரவில்லை​யாம்.

“சும்மா இருந்த என்னை அரசி​யலுக்​குள் இழுத்து வந்​து, இப்​போது தேரை இழுத்து தெரு​வில் விட்ட கதை​யாக முட்​டுச் சந்​தில் நிறுத்திவிட்​டார்​கள்” என்று புலம்​பு​கிறா​ராம். அதனால், தோட்டத்து வீட்டுக்கு தம்பி வந்து போன பிறகு, அப்​பா​விடம் போனில்​கூட பேச மறுத்து தனது ‘வனம்’ வீட்​டிலேயே இருந்து வரு​கிறா​ராம்.

இதற்​கிடையே, அப்பா - மகன் அதி​காரப் போ​ராட்​டத்​தில் அநியாயத்துக்கு பா​திக்​கப்​பட்ட மாம்​பழத்து ஊரின் ‘அருள் பெற்றவருக்​கு’ ஆளும் தரப்​பில் இருந்து இன்​வைட் வந்​த​தாம். ஆனால், தனிக்​காட்டு ராஜா​வாய் இருந்து பழகி​விட்ட அவருக்​கு, அந்த பக்​கம் போய் கூட்​டத்​தோடு கூட்​ட​மாய் கும்​மியடிக்க விருப்பம் இல்​லை​யாம்.

அதேசம​யம், ‘பழக்’ கட்சி பெரிய​வர் இத்​தனை நாளும் தன்​பக்​கம் நின்​றவர்​களை கலந்து பேசாமல், அவர்​களைப் பற்றி எல்​லாம் கொஞ்​ச​மும் யோசிக்​காமல் மகனைக் கட்​டித் தழுவி கண்​ணீர் உகுத்​த​தில் அவருக்கு சொல்​ல​முடி​யாத அளவுக்கு ‘லிட்​டில்’ வருத்தமாம். அதனால் ‘பழக்’ கட்​சி​யின் இன்​னொரு பிரி​வாக தனது தலை​மை​யில் ஓர் அணி​யைத் திரட்டி செயல்​படும் திட்டத்தில் இருக்​கிறா​ராம். இவருக்​குப் பின்​புலத்​தில் ‘மணி​யான’ தலை​வரும், ‘மதி​யான’ மகளும் இருப்​ப​தாகச்​ சொல்​கிறார்​கள்​.

SCROLL FOR NEXT