தமிழகம்

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்

செய்திப்பிரிவு

ஈரோடு: ​முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனுக்கு வழங்​கப்​பட்டு வந்த துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது. அதி​முக பொதுச்செயலாளர் பழனி​சாமிக்​கும், செங்​கோட்​டையனுக்​கும் இடையே பனிப்​போர் நிலவியது.

இந்​நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கோபிசெட்​டிப்​பாளை​யத்தை அடுத்த குள்​ளம்​பாளை​யத்​தில் உள்ள செங்​கோட்​டையன் வீட்​டுக்கு துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு வழங்​கப்​பட்​டு, சுழற்சி முறை​யில் 24 மணி நேர​மும் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர்.

பின்​னர், கட்சி விரோத நடவடிக்​கை​யில் ஈடு​பட்​ட​தாக, முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கடந்த மாதம் அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​டார். இதையடுத்து தனது எம்​எல்ஏ பதவியை அவர் ராஜி​னாமா செய்​தார்.

பின்​னர், தவெக தலை​வர் விஜய் முன்​னிலை​யில், அக்​கட்​சி​யில் தனது ஆதர​வாளர்​களு​டன் செங்​கோட்​டையன் இணைந்​தார்.

இதையடுத்​து, அவரை சந்​திக்க தவெக​வினர் அதிக எண்​ணிக்​கை​யில் அவரது வீட்​டுக்கு வந்து செல்​கின்​றனர். இதனால் வட மாநிலத்​தைச் சேர்ந்த 2 பவுன்​சர்​கள் செங்​கோட்​டையன் வீட்​டில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அவர்​கள் தவெக சார்​பில் நியமிக்​கப்​பட்​ட​வர்​கள் என்று கூறப்​படு​கிறது. இந்த சூழலில், செங்​கோட்​டையன் வீட்​டுக்கு வழங்​கப்​பட்​டிருந்த துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு நேற்​று திரும்​பப்​ பெறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT