தமிழகம்

செந்தில் பாலாஜி, அவரது தம்பியை கைது செய்ய போலீஸார் தீவிரம்: கரூரில் முகாமிட்டு தீவிர சோதனை

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் விவகாரத்தில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை/ கரூர்: தவெக எம்​எல்​ஏ​விடம் ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி எம்​எல்ஏ மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மாருக்கு முக்​கிய தொடர்பு இருப்​ப​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​ததை அடுத்​து, அவர்​களை கைது செய்​யும் நடவடிக்​கை​யில் போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக 108 இடங்​களை கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. இருப்​பினும் ஆட்சி அமைக்​கத் தேவை​யான 118 என்ற பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட்​கள், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகளின் ஆதர​வுடன் விஜய் முதல்​வ​ரா​னார். சட்​டப்​பேர​வை​யில் மே 13-ம் தேதிநடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் தோழமைக் கட்​சிகள் மற்​றும் அதி​முக​வில் இருந்து 25 உறுப்​பினர்​கள் என மொத்​தம் 144 உறுப்​பினர்​களின் ஆதர​வுடன் தவெக அரசு வெற்றி பெற்​றது.

இந்த நிலை​யில், விஜய் தலை​மையி​லான ஆட்​சி​யைக் கவிழ்க்க சதி நடந்​துள்​ள​தாக வெளி​யான தகவல் அரசி​யல் களத்​தில் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்​ளது. கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்​ஏ​வான டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை அணுகிய நபர்​கள், ‘‘சட்​டப்​பேர​வை​யில் (சபா​நாயகருக்கு எதி​ரான) நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தின்​போது நாங்​கள் சொல்​வது​போல் நீங்​கள் நடந்து கொள்ள வேண்​டும். அதற்​காக உங்​களுக்கு ரூ.35 கோடி தரு​கிறோம்’’ என்று கூறி​யுள்​ளனர். ஒரு பிர​தான கட்​சி​யைச் சேர்ந்த சிலர் கேட்​டுக்கொண்​டதன் பேரில் இவ்​வாறு தொடர்புகொள்​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர்.

இது தவெக ஆட்​சி​யைக் கவிழ்ப்​ப​தற்​கான சதி என யூகித்​துக்​கொண்ட எம்​எல்ஏ இளை​ய​ராஜா, அதற்கு உடன்பட மறுத்​ததோடு, உடனடி​யாக இது குறித்து கட்சி மேலிடத்​துக்கு தகவல் கொடுத்​துள்​ளார். பின்​னர், தலை​மை​யின் ஒப்​புதலோடு சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்​தார். காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின்​பேரில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர். அதில் பல முக்​கிய தகவல்​கள் தெரிய​வந்​துள்​ளன.

இதையடுத்​து, தேர்​தல் நேரங்​களில் கருத்​துக் கணிப்​பு​களை நடத்​தும் ‘ஐபிடிஎஸ்’ என்ற நிறு​வனத்தை நடத்​தும் சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு, அவருக்கு பின்​னணி​யாக செயல்​பட்ட திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த தியாக​ராஜன் ஆகிய 3 பேரை அடுத்​தடுத்து கைது செய்த போலீ​ஸார், நேற்று முன்​தினம் இரவு அவர்​களை புழல் சிறை​யில் அடைத்​தனர்.

இதையடுத்​து, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் நெருங்​கிய ஆதர​வாளர்​கள் என கூறப்​படும் சக்​தி​மெஸ் கார்த்​திக், ரமேஷ் ஆகிய இரு​வரும் கரூரில் பிடிபட்​டனர். அவர்​களும் விசா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டனர். தொடர்ந்து நடத்​தப்​பட்ட புலன் விசா​ரணை​யில், திமுக முன்​னாள் அமைச்​சர்செந்​தில் பாலாஜி​யின் தம்பி அசோக்​கு​மார் இதுதொடர்​பாக சென்​னை​யில் நரேஷை சந்​தித்​துள்​ளார். செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக்​கு​மார் ஆகியோரது அறி​வுரை​யின் பேரிலேயே எம்​எல்ஏ இளை​ய​ராஜாவை திரு​நாவுக்​கரசு தொடர்பு கொண்டு பேரம் பேசி​யுள்​ளார் என்​றும் தெரியவந்​துள்​ளது.

இதையடுத்​து, இந்த வழக்​கில் அசோக்​கு​மாரை​யும் போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர். அவரை கைது செய்​வதற்​கான நடவடிக்கை முடுக்கி விடப்​பட்​டுள்​ளது. அவர் செல்​போனை சுவிட்ச் ஆஃப் செய்​து, தலைமறை​வாகி விட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். அவரை கைது செய்ய தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜாவை தங்​கள் பக்​கம் இழுக்க கரூரில் திமுக ஆதர​வாளர்​கள் தனி​யாக ஒரு சதித் திட்​டம் தீட்​டிய​தாக​வும் தகவல் வெளி​யானது. அவரைப் போலவே வேறு சில தவெக எம்​எல்​ஏக்​களிடம் இது​போல பேரம் நடந்​த​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. எனவே, இந்த விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை​யும் கைது செய்ய போலீ​ஸார் முடிவு செய்து விசா​ரணை வளை​யத்தை விரிவுபடுத்தி உள்​ளனர்.

ரூ.35 கோடி பேரத்​தின் பின்​னணி​யில் மேலும் சில முக்​கிய பிர​முகர்​கள் இருப்​பது போலீ​ஸாரின் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. செந்​தில் பாலாஜி​யின் மிக நெருங்​கிய ஆதர​வாளர்​களே இந்த பேரத்​துக்கு மூளை​யாக செயல்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. அவர்​களை​யும் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

கரூரில் உள்ள தங்​கும் விடு​தி​களில் போலீ​ஸார் நேற்று தீவிர சோதனை மேற்​கொண்​டனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்​தில் உள்ள செந்​தில் பாலாஜி, அசோக்​கு​மாரின் வீடு​களை புகைப்​படம் எடுத்​துக் கொண்​டனர். தொடர்ந்​து, கரூரில் முகாமிட்​டு, தீவிர தேடு​தல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதுவரை 8 பேர் கைது: ஏற்​கெனவே இந்த விவ​காரத்​தில் திரு​நாவுக்​கரசு, நரேஷ், தியாக​ராஜன் ஆகிய 3 பேர் கைது செய்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். அதன்​பின்​னர், விசா​ரணை​யில் இருந்த கார்த்​திக், ரமேஷ் ஆகிய இரு​வரை கைது செய்த போலீ​ஸார் கூடு​தலாக சென்னை பள்​ளிக்​கரணை​யைச் சேர்ந்த சீனி​வாசன் (46), செல்​வன் (54), குரோம்​பேட்​டையைச் சேர்ந்த ராஜேஷ் (43) என மேலும் 3 பேரை கைது செய்​துள்​ளனர். கைதான சீனிவாசன் அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT