ராமேசுவரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. (அடுத்த படம்) அங்கு அமைய உள்ள ஹனுமன் சிலையின் மாதிரி வடிவம்.

 
தமிழகம்

நாட்டின் 4 திசைகளிலும் 108 அடி உயரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் திட்டம்: ராமேசுவரத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கியது

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ​நாட்​டின் 4 திசைகளி​லும் ஹனுமன் சிலை அமைக்​கும் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, ராமேசுவரத்​தில் 108 அடி உயர சிலை அமைக்​கும் பணி​கள் இறு​திக் கட்​டத்தை நெருங்கி வரு​கின்​றன.

நாட்​டின் 4 திசைகளில் 108 அடி உயர ஹனு​மன் சிலை அமைக்​கும் திட்​டம், 2008-ம் ஆண்டு ஹெச்சி நந்தா அறக்​கட்​டளை அறங்​காவலரும், அனு​மன் பக்​தரு​மான நிகில் நந்தா (49) என்​பவ​ரால் தொடங்​கப்​பட்​டது. இமாச்சல பிரதேச மாநிலத்​தில் உள்ள சிம்லா நகரின் புறநகர் பகு​தி​யான ஜக்கு மலை​யில்​தான் முதல்

சிலை அமைக்​கும் பணி 2008-ல் தொடங்​கப்​பட்​டது. இப்​பணி முடிந்து 2010-ல் சிலை திறக்​கப்​பட்​டது. குஜ​ராத்​தின் மோர்பி என்ற இடத்​தில் உள்ள பரமபூஜ்ய பாபு கேஷ்​வானந்த் ஆசிரமத்​தில் 2-வது சிலை அமைக்​கும் பணி கடந்த 2018-ல் தொடங்​கியது.

இந்த 108 அடி உயர ஹனு​மன் சிலையை 2022-ல் காணொலி மூலம் பிரதமர் நரேந்​திர மோடி திறந்து வைத்​தார். அப்​போது பிரதமர் மோடி பேசும்போது, “வலிமை, தைரி​யம், கட்​டுப்​பாடு ஆகிய​வற்​றின் உரு​வ​மாக ஹனு​மன் திகழ்​கிறார்.

நாட்​டின் நான்கு திசைகளி​லும், ஹனு​மன் சிலை அமைக்​கும் திட்​டத்​தில் 3-வது சிலை அமைக்​கும் பணி ராமேசுவரத்​தில் தொடங்​கப்பட உள்​ளது. 4-வது சிலை மேற்கு வங்​கத்​தில் அமைக்​கப்​படும்” என்றார்.

ராமாயண முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், ராமேசுவரத்தில் ஹெச்சி நந்தா அறக்​கட்​டளை சிலை அமைத்து வரு​கிறது.

2022 பிப்​ர​வரி​யில் ராமேசுவரம் ஓலைக்​குடா கடற்​கரை அருகே ரூ.83 கோடி மதிப்​பில் அடிக்​கல் நாட்டு விழா நடை​பெற்​றது.

தற்​போது பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ஹனு​மன் இலங்​கையைப் பார்ப்​பது​போல சிலை அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

வரும் பிப்​ர​வரிக்​குள் சிலையை அமைக்​கும் பணியை முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. திறப்பு விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொள்ள வாய்ப்​பு உள்​ள​தாக அந்த அறக்​கட்​டளை நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT