தவெக தலைவர் விஜய்

 
தமிழகம்

தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு வெற்​றி​யில் குதிரை பேர முறை​கேடு புகார்​கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்​சநீ​தி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள ரிட் மனு​வில், தமிழ்​நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த 13-ம் தேதி நடத்​தப்​பட்ட தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு வெற்றி பெற செய்​யும் வகை​யில் ஆதர​வளித்த கட்​சிகளுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு தொகை​யும், 1000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஒப்​பந்​தங்​களுக்​கான உறு​தி​யும் அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், நம்​பிக்கை வாக்​கெடுப்பு ஜனநாயக முறை​யில் நடை​பெற​வில்லை என்​றும் புகார்​கள் எழுந்​துள்​ளன.

மேலும் அமு​முக எம்​எல்ஏ காம​ராஜும், எஸ் பி வேலுமணி தலை​மையி​லான பிரி​வினரும் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இது​போன்ற குதிரைபேர புகார்​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். சிபிஐ விசா​ரித்து முடிக்​கும் வரை குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நடை​முறைப்​படுத்​த​ உத்​தர​விட வேண்​டும் என்​றும்​ மனுவில்​ கோரப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT