தமிழகம்

மின்​மாற்​றிகள் கொள்​முதல் வழக்கு: செந்​தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்த மனுக்​கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மின்​மாற்​றிகள் கொள்​முதல் செய்​யப்​பட்​ட​தில் அரசுக்கு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட விவ​காரத்​தில் எம்​எல்ஏ செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான சிபிஐ விசா​ரணையை எதிர்த்து தாக்​கல் செய்யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் தள்ளு​படி செய்​துள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 2021-23 கால​கட்​டத்​தில் சுமார் 45 ஆயிரம் மின் மாற்​றிகளை கொள்​முதல் செய்​ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்​றும், எனவே இதற்கு காரண​மான முன்​னாள் மின்​வாரிய அமைச்​சரும், தற்​போதைய கோவை தெற்கு தொகுதி எம்​எல்​ஏ-வு​மான செந்​தில் பாலாஜி, டான்​ஜெட்கோ முன்​னாள் தலை​வ​ரான ராஜேஷ் லக்​கானி, மின்​வாரிய கொள்​முதல் பிரிவு நிதி கட்​டுப்​பாட்​டாள​ரான வி.​காசி ஆகியோர் மீதான குற்​றச்​சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்​புத்​துறை முறை​யாக விசா​ரணை நடத்​த​வில்​லை. எனவே இதுதொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக்​குழு அல்​லது சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் எனக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

அந்த வழக்​கு​களை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, கடந்த ஏப்​.29 அன்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு எதி​ரான புகார்​கள் மீது சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டிருந்​தனர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து மின்​வாரிய முன்​னாள் தலை​வர் ராஜேஷ் லக்​கானி, கொள்​முதல் பிரிவு நிதி கட்​டுப்​பாட்​டாளர் வி.​காசி ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடந்​தது.

அப்​போது வி.​காசி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சித்​தார்த் தவே, ‘‘இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை கோரப்​பட​வில்​லை.

இருப்​பினும் சென்னை உயர் நீதி​மன்​றம் சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட்​டுள்​ளது. அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் இந்த வழக்கு உயர் நீதி​மன்​றத்​தி்ல் தாக்​கல் செய்​யப்​பட்​டது’’ என்​றார்.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், ‘‘சிபிஐ விசா​ரணை வேண்​டும் என கோரப்​ப​டா​விட்​டாலும் தேவைப்​படும் பட்​சத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றமே உத்​தர​விட முடி​யும். இந்த விவ​காரத்​தில் நாங்​கள் தலை​யிட விரும்​ப​வில்​லை. இருந்​த​போதும் சிபிஐ சுதந்​திர​மான விசா​ரணையை மேற்​கொள்ள வேண்​டும்’’ எனக்​கூறி காசி தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​தனர்.

அப்​போது டான்​ஜெட்கோ முன்​னாள் தலை​வர் ராஜேஷ் லக்​கானி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ்​.​நா​யுடு, தங்​கள் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக தெரி​வித்​தார். அதையேற்ற நீதிப​தி​கள், அந்த மேல்​முறை​யீட்டு மனுவை​யும் தள்​ளுபடி செய்து உத்​தரவிட்டனர்.

SCROLL FOR NEXT