தமிழகம்

தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள முக்​கிய கோயில்​களின் உபரி நிதியை தமிழ்​நாடு மின்​விசை நிதி மற்​றும் அடிப்​படை வசதி மேம்​பாட்டு நிறு​வனம், தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து வளர்ச்சி நிதி கழகத்​தில் முதலீடு செய்​யும் வகை​யில் அறநிலை​யத் துறை சட்​டத்​தின் முதலீட்டு விதி​களில் திருத்​தம் செய்து அறநிலை​யத் துறை கடந்த பிப்​ர​வரி​யில் அரசாணை பிறப்​பித்​தது.

இந்த அரசாணையை ரத்து செய்​யக்​கோரி​யும், கோயில் நிதியை வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்ய தடை விதிக்​கக்​கோரி​யும் ஆலயவழி​பாட்​டாளர் சங்​கத் தலை​வ​ரான சென்னை மயி​லாப்​பூரைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், கோயில் சொத்​துகளை​யும், நிதி​யை​யும் பாது​காக்​கும் நோக்​கில்​தான் அறநிலை​யத் துறை சட்​டம் இயற்​றப்​பட்​டது. ஆனால் அறநிலை​யத்துறை, சட்​டத்​துக்​குப் புறம்​பாக அந்த நிதியை அரசின் வங்கிசாரா நிதி நிறு​வனங்களில் முதலீடு செய்​வது என்​பது ஏற்​புடையதல்ல.

எனவே கோயில் நிதியை அரசின் நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்​ய தடை விதிக்க வேண்​டும். அத்​துடன் இது தொடர்​பான அரசாணை​யை​யும் ரத்து செய்ய வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ரவி சேஷாத்​ரி, வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாத் ஆகியோர் ஆஜராகி, ``தமிழகம் முழு​வதும் உள்ள பிரபல கோயில்​களின் உபரி நிதி​யான ரூ.2 ஆயிரத்து 700 கோடி சட்ட விரோத​மாக அரசின் வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்​யப்​பட்டு இருப்​பது, கோயில் நிதியை அரசின் அன்​றாட செல​வினங்​களுக்கு மடை​மாற்​றம் செய்​வது போல் உள்​ளது.

அந்த முதலீடு பாது​காப்​பான​தா, கோயில் நிதி வட்​டி​யும், முதலு​மாக எப்​போது சம்​பந்​தப்​பட்ட கோயில்​களுக்கு திருப்​பிச் செலுத்​தப்​படும் என எந்த உத்​தர​வாத​மும் கிடை​யாது. எனவே இதன்​மூலம் கோயில்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இழப்பை ஈடு​செய்ய தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்'' என வாதிட்​டனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள், தமிழ்​நாடு மின்​விசை நிதி மற்​றும் அடிப்​படை வசதி மேம்​பாட்டு நிறு​வனம், தமிழ்​நாடு போக்​கு​வரத்து வளர்ச்சி நிதி கழகம் மற்​றும் ரிசர்வ் வங்கி நிர்​வாகம் ஆகிய​வை பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை அடுத்​த வாரத்​துக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT