சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

 
தமிழகம்

போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம், செங்கையில் பயணிகள் மறியல்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு / காஞ்சிபுரம்: சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிக்க போதிய பேருந்​துகள் இல்​லாத​தால் கிளாம்​பாக்​கம், செங்​கல்​பட்​டில் பயணி​கள் பல மணி நேரம் காத்​திருந்து அதிருப்​தி​யடைந்து மறியல் போரட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி சொந்த ஊர்​களுக்​குச் சென்று வாக்​களிக்க நேற்று முன் தினம் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் பயணி​கள் திரண்​ட​தால் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணி​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தென் மாவட்​டங்​களுக்கு செல்​லும் ஏழை மற்​றும் நடுத்தர மக்​கள் அரசுப் பேருந்​துகளை நாடி கிளாம்​பாக்​கத்​தில் குவிந்​தனர். திருச்​சி, மதுரை, கோவை, திருநெல்​வேலி உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களுக்​குப் போதிய பேருந்​துகள் இயக்​கப்​பட​வில்​லை.

இதனால் பெண்​கள், குழந்​தைகள் என ஆயிரக்​கணக்​கான பயணி​கள் விடிய விடிய பேருந்து நிலை​யத்​திலேயே காத்​திருக்​கும் நிலை நேரிட்​டது. பேருந்​துகள் வந்​த​போது மக்​கள் முண்​டியடித்து ஏறிய​தால் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதில், ஆத்​திரமடைந்த பயணி​கள் போக்​கு​வரத்து அதி​காரி​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். ஒரு​கட்​டத்​தில் பேருந்து நிலை​யத்​துக்கு உள்​ளேயே அமர்ந்து பயணி​கள் போராட்​டம் நடத்​தினர்.

மேலும், அவர்​கள் ஜிஎஸ்டி சாலை​யில் மறியலில் ஈடுபட முயன்​ற​போது போலீ​ஸார் தடுத்து நிறுத்தி பேச்​சு​வார்த்தை நடத்​தினர். நேற்று அதி​காலை 4 மணி வரை பயணி​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இருப்​பினும் கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முடி​யாமல் வண்​டலூர் ஜிஎஸ்​டி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. அதி​காரி​கள் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்​க​வில்லை என பயணி​கள் குற்​றம் சாட்​டினர்.

மேலும், நேற்று காலை 9 மணிக்கு பேருந்து இல்​லாத​தால், திண்​டிவனம், திரு​வண்​ணா​மலை, வந்​த​வாசி, செய்​யூர் விழுப்​புரம் சேலம் போன்ற இடங்​களுக்கு செல்​லும் பயணி​கள் கடும் அவதி​யடைந்​தனர். அப்​போது மீண்​டும் பயணி​கள் கிளாம்​பாக்​கத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால் சுமார் 3 மணி நேரம் ஜி.எஸ்​.டி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதனால் சொந்த வாடகை வாக​னத்​தில் ஊருக்கு சென்​றவர்​கள் அவதி​யடைந்​தனர்.

கல்​பாக்​கம், வந்​த​வாசி, திரு​வண்​ணா​மலை, மது​ராந்​தகம், திண்​டிவனம், செய்​யூர் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள கிராம பகு​தி​களுக்கு காலை 10 மணி முதல் பேருந்து இல்​லாத​தால் செங்​கல்​பட்டு பேருந்து நிலை​யம் அருகே பயணி​கள் மறியலில் ஈடு​பட்​டனர்​. பின்​னர்​ பல மணி நேரம்​ கழித்​து பேருந்​துகள்​ இயக்​கப்​பட்​டன.

தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில், போதிய பேருந்து வசதி இல்லாமலும், உணவகங்கள் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலமணி நேரம் காத்திருந்து பேருந்தில் சென்றனர்.

SCROLL FOR NEXT