அதி​முக​ பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சகர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி

 
தமிழகம்

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மீண்டும் பொறுப்பு; சி.வி.சண்முகத்துக்கு ஷாக்!

வெற்றி மயிலோன்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி மீண்டும் இணைந்து செயல்படும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சி.வி.சண்முகத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. அதைத்​ தொடர்ந்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் கருத்​து ​வேறு​பாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர். மேலும், தவெக அரசின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதரவாக​வும் வாக்​களித்​தனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டவர்கள் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.

அதன்பின்னர், ஒருகட்டத்தில் தனியாக செயல்பட்ட எம்எல்ஏக்கள் பழனிசாமியுடன் இணக்கமானார்கள். அதிலும், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் மீண்டும் இணைந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்தச்சூழலில் அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இன்று அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நிலையச் செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, எம்எல்ஏ திருத்தணி கோ.அரி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக ஏடிசி பொன் தனபாலன், செயலாளராக பெல்.இரா.தமிழரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்ட செயலாளர்களும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட பெரும்பாலானோருக்கு பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், சி.வி.சண்முகத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.

SCROLL FOR NEXT