தமிழகம்

சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்தில் உரிமையாளர் உயிரிழப்பு: 6 பேருக்கு தொடர் சிகிச்சை

செய்திப்பிரிவு

சென்னை: நகைப்​பட்​டறை​யில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்​பட்ட தீ விபத்து சிக்கி உரிமை​யாளர் உயிரிழந்துள்ளார். ஊழியர்​கள் 6 பேர் கவலைக்​கிட​மான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

சென்னை சவு​கார்​பேட்​டை, சிங்​கண்​ணன் தெரு​வில், 4 மாடிக் கட்​டிடத்​தில் நகைப்​பட்​டறை ஒன்று செயல்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்​கத்​தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்​பவர் இந்த நகைப்​பட்​டறையை நடத்தி வரு​கிறார்.

          

இவருக்கு திரு​மண​மாகி பாயல்​பாகு என்ற மனை​வி​யும், 4 வயதில்பெண் குழந்​தை​யும் உள்​ளனர். இந்த பட்​டறை​யில் வடமாநிலத்​தைச் சேர்ந்த சிலர் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

இங்கு பழைய மற்​றும் புதிய தங்​கத்தை உருக்கி புதிய நகைகள் தயாரித்து சென்​னை​யில் உள்ள பிரபல நகைக்​கடைகளுக்கு அனுப்பிவைக்​கப்​படு​கிறது. நேற்று முன்​தினம் இரவு 7 மணி​யள​வில் 4-வது மாடி​யில் உள்ள நகைப்​பட்​டறை​யில் ஊழியர்​கள் வழக்​கம்​போல் நகைகளை உருக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது எதிர்​பா​ராத வித​மாக அங்​கிருந்த சிலிண்​டரில் காஸ் கசிவு ஏற்​பட்டு தீ விபத்து ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் அடுத்​தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் ஏற்​பட்ட தீ விபத்​தில் கட்​டிடத்​தின் ஒரு பகுதி இடிந்து ஊழியர்​கள் 7 பேர் தீயில் சிக்கி படு​காயமடைந்​தனர்.

தீயணைப்​புத் துறை​யினருக்கு தகவல் கிடைத்​ததையடுத்​து, அவர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று தண்​ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை முழு​மை​யாக அணைத்​தனர்.

இந்த விபத்​தில் சிக்​கிய நகைப்​பட்​டறை உரிமை​யாளர் சுமன் பால் பி சோகித் உட்பட 7 பேரை தீயணைப்பு வீரர்​கள் மற்​றும் காவல் துறை​யினர் மீட்டு சிகிச்​சைக்​காக ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அங்கு அனை​வருக்​கும் முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்​டு, மேல் சிகிச்​சைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி நகைப்​பட்​டறை உரிமை​யாளர் உயி​ரிழந்​தார்.

மேலும் நகைப்​பட்​டறை ஊழியர்​களான மேற்​கு​வங்​கத்​தைச் சேர்ந்த அரவிந்த் தாக்​கல் (27), ஜாந்தோ இந்​திரஜித்​(40), சிமந்​தோ​மால் (47), ராகேஷ் டேலி (26), ஆனந்து (32), சூரஜ் (25) ஆகியோர் 70 சதவீத தீக்​கா​யங்​களு​டன் கவலைக்​கிட​மான நிலை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த விபத்து குறித்து யானைக்​க​வுனி போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT