தமிழகம்

சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் குறித்து விரைவில் ஆணை

செய்திப்பிரிவு

சிறப்பு கால​முறை ஊதிய பணி​யாளர்​களுக்கு விரை​வில் சிறப்பு ஓய்​வூ​தி​யம் குறித்த ஆணை வெளி​யிடப்​படும் என்று ஆளுநர் உரை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று ஆளுநர் உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு ஊழியர்​களின் கடைசி மாத ஊதி​யத்​தில் 50 சதவீதம் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​ய​மாக​வும், தகுதி வாய்ந்த குடும்ப உறுப்​பினர்​களுக்கு ஓய்​வூ​தி​ய​தா​ரர் பெற்று வந்த ஓய்​வூ​தி​யத்​தில் 60 சதவீதம் குடும்ப ஓய்​வூ​தி​ய​மாக​வும், ஆண்​டு​தோறும் பணி​யில் உள்ள அரசு பணி​யாளர்​கள் வழங்​கப்​படு​வதற்கு இணை​யாக அகவிலைப்​படி உயர்​வும் ரூ.25 லட்​சத்​துக்கு மிகாமல் பணிக்​கொடை​யும் வழங்​குதல் உட்பட பல்​வேறு அம்​சங்​களு​டன் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​துக்கு நிக​ரான ‘தமிழ்​நாடு உறுதி அளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம்’ செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

          

இதன்​மூலம் ஓய்​வூ​திய நிதி​யத்​துக்கு முதல் கட்​ட​மாக ஒரு முறை பங்​களிப்​பாக ரூ.13 ஆயிரம் கோடி, ஆண்​டு​தோறும் அரசின் பங்​களிப்​பாக கூடு​தலாக ரூ.11 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்​கும். கடுமை​யான நிதி நெருக்​கடி​யிலும் அரசு பணி​யாளர்​கள் நலனுக்​காக இந்​தத் திட்​டத்தை செயல்​படுத்த அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதே​போன்று சிறப்பு கால​முறை ஊதிய முறை​யில் பணி​யாற்றி வரும் பணி​யாளர்​களின் சிறப்பு ஓய்​வூ​தி​யம் குறித்த பல்​வேறு கோரிக்​கை​களை அரசு பரிசீரித்து உரிய ஆணை​களை விரை​வில் வெளி​யிடும்.

பழமை​யான ​கோ​யில்​கள்: ஆயிரம் ஆண்​டு​கள் பழமை​யான 352 திருக்​கோ​யில்​களை ரூ.425 கோடி​யில் தொன்மை மாறாமல் புனரமைத்து பாது​காக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இது​வரை 76 கோயில்​களில் குட​முழுக்​கு​கள் நடை​பெற்​றுள்​ளன. தமி​ழ​கமெங்​கும் ரூ.8,057 கோடி​யில் 28,229 திருப்​பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

மேலும் ஹஜ் பயணி​களின் நலனுக்​காக சென்​னை​யில் ரூ.39 கோடி​யில் ஹஜ் இல்​லம் கட்​டு​மான பணிக்​கான அடிக்​கல் நாட்​டப்​பட்டு பணி​கள் தொடங்​கி​யுள்​ளன. கடந்த 2023 நவம்​பர் முதல் 2025 மார்ச் மாதம் வரை ‘மக்​களு​டன் முதல்​வர்’ திட்​டம் 3 கட்​டங்​களாக செயல்​படுத்​தப்​பட்​டது. இதன்​படி 4,835 முகாம்​கள் நடத்​தப்​பட்​டு, 23.49 லட்​சம் மனுக்​களுக்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது. இதையடுத்து ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தில் கடந்த ஆண்டு ஜூலை 15 முதல் நவம்​பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்​கள் நடத்​தப்​பட்​டன. இது​வரை 36.62 லட்​சம் மனுக்​களுக்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு உரை​யில் இடம்​பெற்​றுள்​ளது.

SCROLL FOR NEXT