தமிழகம்

தொழிலாளர்களுக்கு ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​தால், அன்​றைய தினம் அனைத்து வகை தொழிலா​ளர்​களுக்​கும் சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை அளிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இணை இயக்​குநர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: கேரளம் மற்​றும் புதுச்​சேரி​யில் ஏப்​ரல் 9-ம் தேதி அன்​றும், தமிழகத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி​யும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டப்​படி, தேர்​தல் நடை​பெறும் நாளன்​று, தொழிற்​சாலைகளில் பணிபுரி​யும் அனைத்து வகை தொழிலா​ளர்​களும் (தினக்​கூலி, தொகுப்​பூ​தி​யம், வாரந்​திர ஊதி​யம், ஒப்​பந்த ஊதி​யம் மற்​றும் மாத ஊதி​யம்) வாக்​களிக்​கும் வகை​யில் அவர்​களுக்கு சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை வழங்​கப்பட வேண்​டும் என ஆணை​யிடப்​பட்​டுள்​ளது.

          

எனவே, கேரளம் மற்​றும் புதுச்​சேரி​யில் நடை​பெறும் தேர்​தல்களுக்கு ஏப்​ரல் 9-ம் தேதி அன்று அவ்​வூரைச் சேர்ந்த பணி​யாளர்​களுக்​கும் தமிழகத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி அன்று நடை​பெறும் தேர்​தலுக்கு அனைத்து தொழிற்​சாலை நிறு​வனங்​களும் அனைத்து வகை தொழிலா​ளர்​களுக்​கும் சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை அளிக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது.

மேலும் தேர்​தல் நாளன்று வாக்​களிப்​பது அவசி​யம் என்​ப​தை​யும் தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் தங்​கள் தொழிலா​ளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். தேர்​தல் நாளில் தொழிலா​ளர்​களுக்கு பொது விடு​முறை அளிக்​காத தொழிற்​சாலைகள் பற்​றிய தகவல்​களை மாவட்ட கட்​டுப்​பாட்டு அறைக்கு தொலைபேசி​யில் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்​.

SCROLL FOR NEXT