கோப்புப்படம்
சென்னை: ஒரே மருந்தாளுநர் 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
காலியாகவுள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்கு மாற்றுப்பணி அடிப்படையில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருந்தாளுநர் பணியாற்ற நியமிக்கப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாற்றுப் பணியில் அமர்த்தப்பட்ட மருந்தாளுநர்களை விடுவிக்கவும் காலியாகவுள்ள இடங்களில் மருத்துவம் சார்ந்த பணியாளரை ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.