தமிழகம்

நியாயவிலை கடை தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வெளியிட்ட அறிக்​கை: கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது திமுக வெளி​யிட்ட தேர்​தல் அறிக்கை எண் 236-ல் “தமிழகத்​தின் பல துறை​களின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்​தும் ஒரே துறை​யின்​கீழ் கொண்டு வரப்​படும்” என்ற வாக்​குறுதி அளிக்​கப்​பட்டு இருந்​தது.

இதே​போன்று வாக்​குறுதி எண் 238-ல் “சு​கா​தா​ரத்​தை​யும், எடையை​யும் உறு​திப்​படுத்​தும் வகை​யில் நியாய விலைக் கடைகளில் வழங்​கப்​படும் எல்​லாப் பொருட்​களும் பாக்​கெட்​களில் வழங்க ஆவன செய்​யப்​படும்” என்று குறிப்​பிட்​டிருந்​தது.

திமுக ஆட்​சிப் பொறுப்​பேற்று 55 மாதங்​கள் கடந்த நிலை​யில், இந்த வாக்​குறு​தி​களை நிறைவேற்ற எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இந்​நிலை​யில், பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்​கள் அண்​மை​யில் சென்​னை​யில் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்த கோரிக்​கைகளை நிறைவேற்​று​வதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்​ப​டாது. சுகா​தா​ரத்​தை​யும், எடையை​யும் உறுதி செய்ய வழி​வகுக்​கும்.

எனவே, இதில் உடனடி​யாக முதல்​வர் ஸ்டா​லின் தலை​யிட்​டு, நியாய விலைக் கடைகள் தொடர்​பாக அளித்த வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வும், ஊழியர்​களின் ஊதிய உயர்வை உடனடி​யாக வழங்​க​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT