தமிழகம்

முதல் முறையாக வீடு, நிலம் வாங்குவோருக்கு ஆக.17 முதல் இணைய வழி பத்திரப் பதிவு சேவை அமல்

செய்திப்பிரிவு

சென்னை: முதல் முறை​யாக வீடு, நிலம் வாங்​குபவர்​கள் இணைய வழி​யில் பத்​திரப் பதிவு செய்​யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வரு​கிறது.

இதுகுறித்து அமைச்​சர் லோகேஷ் நேற்று கூறிய​தாவது: பத்​திரப் பதிவுத் துறை​யில் லஞ்​சத்தை ஒழிக்​க​வும், வெளிப்​படையான நிர்​வாகத்தை உறுதி செய்​ய​வும் தவெக ஆட்​சி​யில் பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வருகின்​றன. பொது​மக்​கள் சார் பதி​வாளர் அலு​வல​கங்​களுக்குச் செல்​லாமல் எங்​கிருந்​தும், எப்​போது வேண்​டு​மா​னாலும் இணைய வழி​யில் தங்​கள் ஆவணங்​களைச் சமர்ப்​பித்து பதிவு செய்​யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ திட்​டம் ஆக.17-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படு​கிறது.

இந்​தத் திட்​டம் முதல் முதலாக வீட்டு மனை மற்​றும் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வாங்​கு​வோருக்கு மட்​டுமே பொருந்​தும்.

இதற்​காகப் பதிவுத் துறை இணை​யதளத்​தில் கட்​டு​மான நிறு​வனங்​கள் மற்​றும் நில விற்​பனை​யாளர்​களுக்​குப் பிரத்​யேக வசதி​கள் செய்து தரப்​படும். அவர்​கள் கைரேகை இயந்​திரம், கரு​விழிப் படலம் கவரும் கருவி மற்​றும் ‘வெப் கேம்’ வைத்​திருக்க வேண்​டும். இதன்​மூலம், ஆவண​தா​ரர்​கள் மற்​றும் சாட்​சிகளின் ஆதார் விவரங்​கள், படம், கைரேகை அல்​லது கரு​விழிப் படலம் சரி​பார்க்​கப்​பட்டு இணைய வழி​யில் கட்​ட​ணம் செலுத்​தலாம். தாக்​கல் செய்​யப்​பட்ட ஆவணங்​களில் சார் பதி​வாள​ருக்கு ஏதேனும் சந்​தேகம் இருந்​தாலோ, கூடு​தல் தகவல் தேவைப்​பட்​டாலோ அவர் இணைய வழி​யில் கேள்வி எழுப்​பு​வார்.

அதற்கு விண்​ணப்​ப​தா​ரர் 30 நாட்​களுக்​குள் ஆன்​லைனிலேயே பதிலளிக்க வேண்​டும். பதிவு செய்த ஆவணம் அடுத்த வேலை நாளுக்​குள் சார் பதி​வாளரின் மின் கையொப்​பத்​துடன் ஆவண​தா​ரருக்கு அனுப்பி வைக்​கப்​படும். அதை 60 நாட்​கள் வரை ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

பணம் வாங்​கும் அதி​காரி​கள் குறித்து புகார் வந்​தால் உடனடி​யாகக் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். பதிவுத் துறை​யில் இந்​தாண்டு ரூ.31 ஆயிரம் கோடி வரு​வாய் ஈட்ட இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

‘தெரு மதிப்​பு' தொடர்​பான நடை​முறைப் பிரச்​சினை​களுக்கு ஒரு மாதத்​தில் தீர்வு காணப்​படும். பட்டா வழங்​கு​வது வரு​வாய்த் துறை பணி என்​றாலும், எங்​கள் துறை​யில் தானி​யங்கி முறை​யில் நிலத்​தைப் பதிவு செய்​தவுடனேயே பட்டா பெயர் மாறு​தல் நடக்கும் வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. நீர்​நிலை புறம்போக்​கு, சதுப்பு நிலம் உள்​ளிட்​ட​வற்​றுக்கு எக்​காரணம் கொண்டும்​ பட்​டா வழங்​கப்​ப​டாது. இவ்​வாறு அமைச்​சர்​ லோகேஷ் கூறினார்​.

SCROLL FOR NEXT