சென்னையில் நேற்று நடைபெற்ற லோக்-அதாலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி வழங்கினார். அருகில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும் நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன்.

 
தமிழகம்

1 லட்சம் வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு: தமிழகம் முழுவதும் லோக்-அதாலத்தில் ரூ.858 கோடி இழப்பீடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்ற தேசிய லோக் அதாலத்​தில் 1 லட்​சத்து 3,884 நிலுவை வழக்​கு​களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ. 857.77 கோடி இழப்​பீட்டுத் ​தொகைக்​கான உத்​தரவு வழங்​கப்​பட்​டுள்​ளது.

மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக்-அதாலத் தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வரும், உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யு​மான எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா அறி​வுறுத்​தல்​படி வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட்டன.

அதன்​படி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி பி.பி.​பாலாஜி மற்​றும் ஓய்வுபெற்ற நீதிப​தி​கள் டி.என்​.வள்​ளி​நாயகம், ஏ.ராமமூர்த்​தி, எஸ்​.கே.கிருஷ்ணன், எம்​.ஜெய​பால், பி.கோகுல்​தாஸ் ஆகியோர் தலை​மை​யிலும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் நீதிபதி ஆர்​.கலைமதி மற்​றும் ஓய்வுபெற்ற நீதிப​தி​கள் ஜி. சொக்​கலிங்​கம், ஆர்​.​தா​ரணி ஆகியோர் தலை​மை​யிலும் நிலுவை வழக்​குகள் விசா​ரிக்​கப்​பட்​டன.

இதே​போல மாவட்ட மற்​றும் தாலுகா அளவில் மொத்​தம் 516 அமர்​வு​கள் ஏற்​படுத்​தப்​பட்டு 1 லட்​சத்து 3,884 நிலுவை வழக்​கு​களுக்கு நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்​பட்​டன. இதன்​மூலம் மொத்​தம் ரூ. 857.77 கோடிக்கு பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்பீட்டு தொகைக்​கான காசோலைகள் வழங்​கப்​பட்​டன.

மதுரை மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களில் உயர் நீதிமன்ற மூத்த நீதிப​தி​ ஆர்.சுரேஷ்கு​மார் மேற்​பார்​வை​யிட்டார். தூத்​துக்​குடி, விருதுநகர் மாவட்​டங்​களில் உயர் நீதி​மன்ற நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்​தி​ரா​வும், திண்​டுக்கல்​லில் நீதிபதி எம். தண்​ட​பாணி​யும், புதுக்​கோட்​டை​யில் நீதிபதி என். செந்​தில்​கு​மாரும் ​பார்​வை​யிட்டு காசோலைகளை வழங்கினர்.

இதேபோல சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற லோக்​-அ​தாலத்​தில் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்​தி​கேயன் உள்​ளிட்ட கீழமை நீதி​மன்ற நீதிப​தி​கள் பங்​கேற்​றனர். மாநிலம் முழு​வதும் நடை​பெற்றஇந்த லோக்​-அ​தாலத் ஏற்​பாடு​களை மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு உறுப்​பினர் செயலரும், மாவட்ட நீதிப​தி​யு​மான எஸ்​.​பால​கிருஷ்ணன் தலை​மை​யில்​ அந்​தந்​த மாவட்​டநீதிப​தி​கள்​ செய்​திருந்​தனர்​.

SCROLL FOR NEXT