தமிழகம்

ஆம்னி பேருந்து கட்டண வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

மதுரை: ஆம்னி பேருந்து கட்டண நிர்ணய குழு​வுக்கு 8 ஆண்​டு​களுக்கு முன்பு உச்ச நீதி​மன்​றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்​காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த கதிர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் மதுரை உள்பட பல்​வேறு ஊர்​களில் இருந்து சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களுக்கு இயக்​கப்​படும் தனி​யார் ஆம்னி பேருந்​துகளில் பண்​டிகைக் காலங்​களி​லும், விடு​முறை நாட்​களி​லும் கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

இதனால், உயர் நீதி​மன்​றம் ஆம்னி பேருந்​துகளின் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய குழு அமைத்​தது. அந்​தக்​குழு ஆய்வு செய்து பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கியது. அந்​தப் பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே, தமிழகத்​தில் தனி​யார் ஆம்னி பேருந்​துகளில் சரி​யான கட்​ட​ணம் வசூலிப்​பதை முறைப்​படுத்​த​ வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டது.

இந்த மனு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், ஆம்னி பேருந்​துகளின் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய உயர் நீதி​மன்​றம் குழு அமைத்​தது. இதற்கு உச்ச நீதி​மன்​றம் 2016-ல் தடை விதித்​தது. இதனால் கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட​வில்​லை எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், உச்ச நீதி​மன்​றம் விதித்த தடையை நீக்க கடந்த 8 ஆண்​டு​களாக என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது, தடையை நீக்க இது​வரை மனுத் தாக்​கல் செய்​யாதது ஏன், கூடு​தல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தைத் தடுக்க அரசுக்கு மனம் இல்​லை​யா, இது தொடர்​பாக எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT