சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களிக்க வந்தவர்கள், தங்களின் பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். | படம்: எல் .சீனிவாசன்

 
தமிழகம்

சைதை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க சிலருக்கு அதிகாரிகள் அனுமதி மறுப்பு

மறைந்த தந்தையின் பெயர் இருப்பதாக ஆதங்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சைதாப்​பேட்​டை​யில் சில வாக்​காளர்​களை வாக்​களிக்க அனு​ம​திக்​காத​தால் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, அங்கு பரபரப்பு நில​வியது. சென்னை சைதாப்​பேட்டை பகு​தி​யில் உள்ள ஆண்​கள் மேல்​நிலைப்​பள்ளி வாக்​குச்​சாவடி​யில் காலை​முதல் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்து வந்​தனர்.

அப்​போது, காரணி தெரு​வைச் சேர்ந்த எஸ்​.யசோ​தா, கணேஷ்கு​மார், மனோகரி, கலைச்​செல்​வன், சக்​திவேல் ஆகியோர் வாக்​களிக்க வந்​தனர். ஆனால் அவர்​களிடம் பூத் சிலிப் இல்​லாத​தால், அவர்​களின் வரிசை எண் உள்​ளிட்ட விவரங்​கள் தெரிய​வில்​லை.

எனவே அவர்​களால் வாக்​களிக்க முடி​யாது என அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நிர்வாகத்தின் குளறுபடி இதனால் அதிர்ச்​சி​யடைந்த அவர்​கள், அதி​காரி​களு​ட​னும் அங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாருடன் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.

“நாங்​கள் எஸ்​ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுத்​தும் எங்​களுக்கு பூத் சிலிப் வழங்​கப்​பட​வில்​லை. அனை​வரும் கட்​டா​யம் வாக்​களிக்க வேண்​டும் என்று விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் அரசு, வாக்​களிக்க வந்த எங்​களை இப்​படி திருப்பி அனுப்​புவது எந்த விதத்​தில் நியா​யம்?” என்று அவர்​கள் ஆவேச​மாக கேள்​வியெழுப்​பினர்.

இதில் சக்​திவேல் என்​பவர் கூறுகை​யில், “மறைந்த எனது தந்​தை​யின் பெயர் வாக்காளர் பட்​டியலில் இப்​பொழுதும் நீடிக்​கிறது. ஆனால், எனது பெயர் இல்லை என்று கூறி வாக்​குரிமை மறுக்​கப்​பட்​டுள்​ளது. இது நிர்​வாகத்​தின் மிகப்​பெரிய குளறு​படி” என வேதனை​யுடன் தெரி​வித்​தார்.

இந்த வாக்​கு​வாதத்​தின்​போது, அவர்​களுக்கு ஆதர​வாகப் பேசிய இளைஞர் ஒரு​வர் வெள்ளை நிற சட்​டை​யும், காக்கி நிற கால்​சட்​டை​யும் அணிந்​திருந்​த​தால், அதை வைத்து அங்கு அரசி​யல் மோதலும் உரு​வானது.

அவர் அணிந்​திருந்த ஆடை​யின் நிறத்​தைக் குறிப்​பிட்​டு, அவர் தமிழக வெற்​றிக் கழகத்​தைச் சேர்ந்​தவர் என்​றும், திட்​ட​மிட்டே பிரச்​சினையைத் தூண்​டு​வ​தாக​வும் அங்​கிருந்த மற்ற அரசி​யல் கட்​சி​யினர் குற்​றம் சாட்​டினர்.

இதனால் வாக்​குச்​சாவடி வளாகத்​தில் சிறிது நேரம் பதற்​றம் நில​வியது. இறு​தி​யில் தலை​யிட்ட காவல் துறை​யினர், வாக்​காளர் பட்​டியலில் பெயர் இல்​லாதவர்​களை அனு​ம​திக்க முடி​யாது என்று திட்​ட​வட்​ட​மாகத்​ தெரி​வித்​து அவர்​களை வெளி​யேற்​றினர்​.

SCROLL FOR NEXT