வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்
கும்பகோணம்: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, ஆக.3-ம் தேதி தமிழக முதல்வர் விஜய்- கர்நாடகா டி.கே.சிவக்குமார் முதல்வர் சந்திப்பு குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: எல் நினோ காலநிலை மாற்றத்தால் வெயில் அடிக்கலாம், இல்லையெனில் மழை பெய்யலாம். அதனால், டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், காலநிலைக்கு ஏற்றவாறு எந்தப் பயிர்களை பயிரிடலாம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.
அப்போது, “மேகேதாட்டு அணை தொடர்பாக ஆக.3-ம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வரை சந்திக்கப் போவதாக கூறியிருந்தீர்கள். ஆனால், அது உறுதியான தகவல் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளாரே?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுதொடர்பாக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என வினோத் பதிலளித்தார்.