தூத்​துக்​குடி வி​மான நிலை​யத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர்​ பழனி​சாமி செய்​தி​யாளர்​களுக்​கு பேட்​டியளித்தார்.

 
தமிழகம்

அதிமுக கூட்டணியில் கடுகளவு கூட பிரச்சினை இல்லை: பழனிசாமி உறுதி

செய்திப்பிரிவு

அதி​முக கூட்​ட​ணி​யில் சிறு கடு​களவு கூட பிரச்​சினை இல்லை என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

தென்​மாவட்​டங்​களில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​வதற்​காக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று விமானம் மூலம் தூத்​துக்​குடி வந்​தார். அவருக்கு விமான நிலை​யத்​தில் அதி​முக​வினர் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். தொடர்ந்து செய்​தி​யாளர்​களுக்கு பழனி​சாமி அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

கடந்த 2023 டிசம்​பரில் தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, தென்​காசி மாவட்​டங்​கள் கனமழை​யால் பாதிக்​கப்​பட்​டன.

          

நான்கு மாவட்​டங்​களுக்​கும் நான் நேரில் சென்று மக்​களை சந்​தித்து நிவாரண உதவி​கள் வழங்​கினேன். ஆனால் முதல்​வர் வெள்​ளத்​தில் பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​திக்​காமல் டெல்​லி​யில் நடந்த இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் கலந்​து​கொண்​டார். ஆறு​தல் கூட சொல்​ல​வில்​லை. அது​மட்​டுமல்ல. தூத்​துக்​குடி மாவட்​டத்​தின் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5 நாட்​கள் கழித்​து​தான் மக்​களை சந்​தித்​தார்.

அதி​முக ஆட்​சி​யின் போது, ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​தின் மூலம் தூத்​துக்​குடி​யில் உள்ள பக்​கிள் ஓடையை தூர்​வாரி சரி செய்ய 80 சதவீதம் பணி​கள் நிறைவேற்​றப்​பட்​டன. திமுக ஆட்சி வந்த பிறகு, அந்த 20 சதவீத பணி​கள் நிறைவேற்​றப்​பட்டு இருந்​தால், தூத்​துக்​குடி நகரின் மையப்​பகு​தி​யில் செல்​லும் ஓடை வழி​யாக வெள்​ளம் வடிந்​திருக்​கும்.

ஆனால் சரி​யான முறை​யில் தூர்​வா​ராத​தால், வெள்​ளம் தூத்​துக்​குடி நகரில் சூழ்ந்து மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டார்​கள். தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீரழிந்து விட்​டது. திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் கட்​சி​யினர் கூட இதை குறிப்​பிடு​கிறார்​கள். விளாத்​தி​குளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்டு உள்​ளார். இதுவே சட்​டம் ஒழுங்கு மோச​மாக இருப்​ப​தற்கு சான்​று.

விஜய் வேட்​பாளர் அறிவிக்​கும்​போது இரு​முனை போட்டி தான் என்று கூறி இருக்​கிறார். புதி​தாகத்​தானே வந்​திருக்​கிறார். தேர்​தல் முடிந்​தால் தான் அவரது விவரம் தெரி​யும். அதி​முக கூட்​ட​ணி​யில் எந்த அதிருப்​தி​யும் இல்​லை. திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் கட்​சிகள் மனவருத்​தத்​தில் உள்​ளன. மதி​முக முக்​கிய தலை​வர் பேச்​சு​வார்த்தை முடித்து விட்டு வெளி​யில் வரும்​போது, அழுது​கொண்டே சிரிக்​கிறோம் என்று கூறி​னார். அப்​படிப்​பட்ட நிலை​மை​தான் அந்த கூட்​ட​ணி​யில் உள்​ளது. அதி​முகவை பொறுத்​தவரை எங்​களது கூட்​ட​ணி​யில் எந்​த​வித சிறு கடு​களவு கூட பிரச்​சினை இல்​லை.

புதிய தமிழகம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி எங்​களிடம் நேரடி​யாக பேச்​சு​வார்த்​தையே நடத்​த​வில்​லை. வேறொரு​வர் மூலம் 10 சீட் கேட்​டார். பின்​னர் 5 சீட் கேட்​டார். கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது, எங்​களு​டன் அவர் கூட்​ட​ணி​யில் இல்​லை. 31 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 33 ஆயிரம் ஓட்டு வாங்கி உள்​ளார். அவருக்கு எத்​தனை தொகுதி கொடுக்க வேண்​டும் என்று பார்க்க வேண்​டும். அவர் அதி​க​மான சீட் கேட்டு ஆள் அனுப்​பி​னார். நாங்​கள் இயலாது என்று கூறி​விட்​டோம்.

மீனவர்​கள் நலன் கருதி கச்​சத்​தீவை மீட்க வேண்​டும். இல்​லை​யென்​றால் தற்​காலிக​மாக நீண்​ட​கால குத்​தகைக்கு எடுக்க வேண்​டும். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா இருந்​த​போது, கச்​சத்​தீவை மீட்​டெடுக்க உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளோம். இவ்​வாறு பழனி​சாமி தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT