தமிழகம்

தமிழகத்தில் மின் விநியோகத்தில் இதுவரை சிக்கல் ஏற்படவில்லை: மின்வாரிய தலைவர் தகவல்

நாட்​டிலேயே இங்​கு​தான் அதிக நுகர்வு

செய்திப்பிரிவு

சென்னை: இந்​தி​யா​விலேயே தமிழகத்​தில்​தான் அதிக மின் நுகர்வு உள்​ளது. உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளால் மின் விநி​யோகத்​தில் இது​வரை சிக்​கல் ஏற்​பட​வில்லை என்று தமிழ்​நாடு மின் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தெரி​வித்​துள்​ளார்​.

சென்​னை​யில் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​விலேயே மிக உச்​சபட்ச மின் நுகர்வு தமிழகத்​தில்​தான் பதி​வாகி​யுள்​ளது. 21,000 மெகா வாட் முதல் 23,000 மெகா வாட் வரை மின் நுகர்வு உயர்ந்​துள்​ளது. குறைந்​த​பட்​சமே 18,000 மெகா வாட்​டாக உள்​ளது. பகல், இரவு நேரங்​களில் 21,000 முதல் 22,000 மெகா வாட் வரை தேவை உள்​ளது.

12 மணிவரை இருந்த மின் தேவை, தற்​போது நள்​ளிரவு 1 மணிவரை நீடிக்​கிறது. இந்த ஆண்டு 9 சதவீத மின் தேவை வளர்ச்சி இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. அதற்​கேற்ப இது​வரை இல்​லாத அளவி​லான உச்​சத்தை தமிழகம் எட்​டி​யுள்​ளது. மாநில அரசின் உற்​பத்​தி, மத்​திய அரசு நிறு​வனங்​களின் மின் பகிர்வு மற்​றும் நீண்ட கால ஒப்​பந்​தங்​கள் மூலம் மின்​சா​ரம் பெறப்​படு​கிறது.

தமிழகத்​தில் 11,000 மெகா​வாட் சோலார் மற்​றும் 11,000 மெகா​வாட் காற்​றாலை மின் திறன் உள்​ளது. பகல் நேரத்​தில் சோலார் உற்​பத்தி கைகொடுக்​கிறது. காற்​றாலை சீசன் இன்​னும் தொடங்​காத நிலை​யிலும், உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளால் மின் விநி​யோகத்​தில் இது​வரை சிக்​கல் எழவில்​லை. இரவு நேரங்​களில் மின் தேவையைப் பூர்த்தி செய்​யப் பிற மாநிலங்​களில் இருந்து மின்​சா​ரம் வாங்​கப்​படு​கிறது. சில நேரங்​களில் உபரி மின்​சா​ரம் விற்​க​வும் செய்​யப்​படு​கிறது.

மின் நுகர்வு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க பீக் ஹவர்ஸ் சமயங்​களில் சிறப்​புத் துணைக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மின் விசிறிகள் முதல் ஏசி வரை பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மேலும் உணவகங்​கள் மற்​றும் வீடு​களில் மின்​சார அடுப்​பு​களின் பயன்​பாடு அதி​கரித்​துள்​ளதும் முக்​கியக் காரண​மாகும். இரவு நேரங்​களில் தொழில் துறை​யினரின் மின் தேவை​யும் அதி​கரித்​துள்​ளது.

ஐபிஎல் போட்​டிகளால் மட்​டும் மின் தேவை அதி​கரிக்​க​வில்​லை; மாறாகக் கோடை வெப்​பம் மற்​றும் பொது​வான மின்​னணு சாதனங்​களின் பயன்​பாடே முக்​கியக் காரணம். உரிய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தால், தமிழகத்​தில் மின் விநி​யோகம் சீராக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT