சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று முகத்தில் ஓவியம் வரைந்து 2026 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்ற மாணவிகள். படம்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

புத்தாண்டு 2026 கோலாகல கொண்டாட்டம்: வாழ்த்துகளை தெரிவித்து பொதுமக்கள் உற்சாகம்

குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று இரவு புத்​தாண்டு கொண்​டாட்​டம் களை​கட்​டியது. பட்​டாசு வெடித்​தும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் புத்​தாண்​டைக் கொண்​டாடினர்.

ஆங்​கிலப் புத்​தாண்​டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்​டாசு வெடித்​தும், இனிப்​பு​களை வழங்​கி​யும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் பொது​மக்​கள் உற்​சாக​மாகக் கொண்​டாடினர். அனைத்து கிறிஸ்தவ தேவால​யங்​களி​லும் புத்​தாண்டு சிறப்​புப் பிரார்த்​தனை​கள் நடை​பெற்​றன. இதையொட்​டி, மாநிலம் முழு​வதும் போலீ​ஸார் பலத்த பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டதுடன், இரவு முழு​வதும் தொடர்ந்து கண்​காணிப்​புப் பணி​களை மேற்​கொண்​டனர்.

சென்​னை​யில் மட்​டும் 19,000 போலீ​ஸார் மற்​றும் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மயி​லாப்​பூர், கீழ்ப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, தியாக​ராயநகர் உட்பட சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களி​லும் 425 இடங்​களில் வாகன தணிக்கை நடை​பெற்​றது. மாநிலத்​தின் அனைத்​துப் பகு​தி​களி​லும் இருசக்கர வாக​னப் பந்​த​யங்​களைத் தடுக்க கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. முக்​கிய கோயில்​கள், தேவால​யங்​கள், இதர வழி​பாட்​டுத் தலங்​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. அதே​போல, தமிழகம் முழு​வதும் உள்ள கடற்​கரைப் பகு​தி​களி​லும் போலீ​ஸார் ரோந்​துப் பணி​களில் ஈடு​பட்​டனர். கடலில் இறங்​க​வும், குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. முக்​கிய இடங்​கள் ட்ரோன் கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்​கப்​பட்​டன.

அரசால் அனு​ம​திக்​கப்​பட்ட மனமகிழ் மன்​றங்​கள், ஓட்​டல்​கள், விடு​தி​களு​டன் கூடிய நட்​சத்​திர ஓட்​டல்​கள் ஆகிய இடங்​களில் புத்​தாண்​டுக் கொண்​டாட்​டங்​கள் நடை​பெற்​றன. இதற்​காக பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டிருந்​தன. இரவு நேரத்​தில் அனைத்து மேம்​பாலங்​களும் மூடப்​பட்​டன. வணிக வளாகங்​கள், ஓட்​டல்​கள், இனிப்​பகங்​கள், துணிக்​கடைகளில் அதிக அளவில் மக்​கள் திரண்​டனர். பொது​மக்​களைக் கவரும் வகை​யில் பல்​வேறு இடங்​களும் வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

மகிழ்ச்​சி​யும், வெற்​றி​யும்​... ஆங்​கிலப் புத்​தாண்டை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர், ஆளுநர், முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு: இந்த புத்​தாண்டு புதிய சக்தி மற்​றும் நேர்​மறை​யான மாற்​றத்​தின் அடை​யாள​மாக இருக்​கட்​டும். சுயபரிசீலனை மற்​றும் புதிய தீர்​மானங்​கள் எடுக்​க​வும் இது நல்ல வாய்ப்​பு. இந்​நாளில், நாட்​டின் வளர்ச்​சி, சமூக நல்​லிணக்​கம் மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு ஆகிய​வற்​றுக்கு நமது உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வோம். 2026 புத்​தாண்டு நமது வாழ்​வில் அமை​தி, மகிழ்ச்​சி, செழிப்​பைக் கொண்டு வந்​து, வலு​வான மற்​றும் செழிப்​பான இந்​தி​யாவை உரு​வாக்க புதிய சக்​தியை அளிக்​கட்​டும்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: 2026 விடியல், புதுப்​பிக்​கப்​பட்ட நம்​பிக்கை மற்​றும் வலுப்​படுத்​தப்​பட்ட உறு​தியை அறி​முகப்​படுத்​தட்​டும். நம் வாழ்​வில் மகிழ்ச்​சி, நல்ல ஆரோக்​கி​யம் மற்​றும் செழிப்பை நிரப்​பட்​டும். நிலை​யான மற்​றும் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்க ஒன்​றாக முன்​னேறு​வோம்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: தமிழகத்​துக்கு வெற்​றிகர​மான ஆண்​டாக அமைந்த 2025-க்கு விடை​கொடுத்​து, மாபெரும் வெற்​றியை வழங்​க​வுள்ள 2026-ல் அடி​யெடுத்து வைக்​கத் தயா​ராகிறோம். 2030-க்​குள் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் எனும் நம் கனவு இந்த ஆண்​டில் வலுப்​படும். தமிழகம் யாருக்​கும் தலைகுனி​யாது, தொடர்ந்து போராடும். இது​வரை பெற்ற வெற்​றிகள் தந்த ஊக்​கத்​துடன் 2026-ல் மாபெரும் வெற்​றியை நோக்கி முன்​செல்​கிறோம். அமை​தி​யும், நல்​லிணக்​க​மும், மகிழ்ச்​சி​யும், புதிய வெற்​றிகளும் நிறைந்த ஏற்​றமிகு ஆண்​டாக புத்​தாண்டு அமைய அனை​வருக்​கும் நல் வாழ்த்​துகள்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஆங்​கிலப் புத்​தாண்டு தமிழக மக்​களுக்கு நிறை​வான மகிழ்ச்​சி​யை​யும், தித்​திக்​கும் நிகழ்​வு​களை​யும், நிறைந்த செல்​வத்​தை​யும், நீடித்த ஆயுளை​யும், நிம்​ம​தி​யான வாழ்க்​கை​யை​யும் வழங்​கும் ஆண்​டாக அமையட்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: இந்​தி​யா​வில் ஜனநாயகம் தழைக்​க​வும், மக்​களின் பிரச்​சினை​களுக்​குத் தீர்​வு​காண​வும், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல்​காந்தி எடுத்து வரும் முயற்​சிகள் வெற்றி பெறட்​டும்.

இதே​போல, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, பாமக நிறு​வனர் ராம​தாஸ், திக தலை​வர் கி.வீரமணி, பாமக தலை​வர் அன்​புமணி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், முன்​னாள் எம்​.பி.க்​கள் சு.​திரு​நாவுக்​கரசர், சரத்​கு​மார், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், கொமதேக பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, தமுமக தலை​வர் க.சக்​திவேல் மற்​றும் பல்​வேறு அமைப்​பு​களின் தலை​வர்​கள் காயல் அப்​பாஸ், நாகூர் ராஜா, வி.எம்​.எஸ்​.​முஸ்​த​பா, பால்​ தினகரன்​, எம்​.எஸ்​.​மார்​டின்​ உள்​ளிட்​டோரும்​ புத்​தாண்​டு வாழ்​த்​து களைத்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT