சென்னை: தமிழக ஆளுநருக்கு புதிய பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக (எஸ்.பி) ரகுபதி ஐபிஎஸ் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் மாற்றப்பட்டு, புதிய பாதுகாப்பு அதிகாரியாக வி.பிரசன்னகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார்.