கோப்புப் படம்

 
தமிழகம்

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய நடைமுறை அறிவிப்பு

அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ​விபி ஜிராம் ஜி திட்​டத்​தின்​கீழ் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் புதிய நடை​முறை தமிழக அரசால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை ஆணை​யர் அமுதவல்லி மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அனுப்பி உள்ள சுற்​றறிக்​கை விவரம்: முந்​தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வழங்​கப்​பட்ட அனைத்து சலுகைகளும் விபி ஜிராம்ஜி திட்​டத்​தி​லும் தொடர்​கிறது. சிறப்பு பணி​கள் பொறுத்​தவரை, அகற்​றப்​பட்ட மரங்​களை அப்​புறப்​படுத்​துதல், ஆழப்​படுத்​தப்​படும் இடங்​களில் தண்​ணீர் தெளித்தல், தொழிலா​ளர்​கள் குழந்​தைகளை பராமரித்​தல், மண்​வெட்​டி, கடப்​பாறை போன்​ற வற்றை கொண்டு கரைகளில் கொட்​டப்​படும் மண்​களை சமப்​படுத்​துதல், கரைகளை சமப்​படுத்​துதல் உள்​ளிட்ட பணி​கள் அடங்​கும். அதே​போல், உடல் உழைப்பை மேற்​கொள்​ளக்​கூடிய மாற்​றுத்​திற​னாளி​கள் முட்​புதர்​கள் அகற்​று​தல், மரக்​கன்​றுகள் நடு​தல், மண்​மூடுதல், நீர்​பாய்ச்​சுதல், மண்​வரப்பு மற்​றும் கல்​வரப்பு அமைத்​தல், அகழி தோண்​டு​தல் உள்​ளிட்ட பணி​களில் ஈடு​படுத்​தப்பட வேண்​டும்.

பணித்​தளத்​தில் மாற்​றுத் திற​னாளி​கள் குறை​வாக இருந்​தால், அவர்​களுக்​காக வரையறுக்​கப்​பட்ட சிறப்​புப் பணி​கள் மட்​டுமே வழங்​கப்பட வேண்​டும்.

அதிக எண்​ணிக்​கை​யில் இருந்​தால், 5 அல்​லது 10 பேர் கொண்ட குழுக்​களாகப் பிரித்​து, சாதாரண தொழிலா​ளர்​களின் பணி அளவில் 50 சதவீதம் மட்​டுமே ஒதுக்க வேண்​டும். அந்த மண் தொடர்​பான பணி​களை தின​மும் 4 மணி நேரம் செய்​தாலே போது​மானது.

இதில் முன் அளவீடு செய்​யப்​பட்ட 50 சதவீத பணியை நிறைவு செய்​தால், மாற்​றுத்​திற​னாளி​களுக்கு முழு ஊதி​யம் வழங்​கப்பட வேண்​டும். வேலை கோரும் தகு​தி​யுள்ள அனை​வருக்​கும் 15 நாட்​களுக்​குள் தனித்​து​வ​மான வேலை அட்டை வழங்க வேண்​டும்.

மேலும், மாற்​றுத் திற​னாளி​களுக்​காக தனி மின்​னணு வரு​கைப்​ப​திவேடு பராமரிக்​கப்பட வேண்​டும். பணி அளவீடு, இறுதி அளவீடு மற்​றும் முழு ஊதி​யம் வழங்​கப்​படு​வதை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும்.

மாற்​றுத்​திற​னாளி​களின் குறை​களை தீர்க்க ஒவ்​வொரு மாத​மும் இரண்​டாவது செவ்​வாய்க்​கிழமை வட்​டார அளவிலும், இரண்டு மாதங்​களுக்கு ஒரு​முறை மாவட்ட அளவிலும் குறை​கேள் முகாம்​கள் நடத்​தப்பட வேண்​டும்.

இந்த புதிய நடை​முறை​கள் அனைத்​தை​யும் ஊராட்​சி, வட்​டாரம் மற்​றும் மாவட்ட அளவி​லான அதி​காரி​கள் தொடர்ந்து கண்​காணித்​து, புதிய வேலை​வாய்ப்பு திட்​டத்தை எவ்​வித தொய்​வுமின்றி முழு​மை​யாக செயல்​படுத்​த வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT