2026 - 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்

வேளாண் நிதிநிலை அறிக்கை மறுநாள் சமர்ப்பிக்கப்படுகிறது
2026 - 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026 -2027 நிதி ஆண்​டுக்​கான தவெக அரசின் முதல் பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்​கல் ஆகிறது. மறு​நாள் வேளாண் நிதி​நிலை அறிக்கை சமர்ப்​பிக்​கப்​படு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் அறி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால்,காங்​கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. அதன்பின் தவெக ஆட்சி அமைத்தது.

அந்​தக் கட்​சி​யின் தலை​வர் விஜய், மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராகக் கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றுக் கொண்​டார். முதல்​வர் விஜய் உட்பட 35 அமைச்​சர்​கள் தற்​போது அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றுள்​ளனர். ஆட்​சி​யமைக்க ஆதர​வளித்த கூட்​டணி கட்​சிகளுக்​கும் அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்​கப்​பட்​டது.

புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது. அன்​றைய கூட்​டத்​தில் தமிழக அரசு தயாரித்த உரையை எந்த மாற்​ற​மும் இன்றி முழு​மை​யாக ஆளுநர் அர்​லேகர் வாசித்​தார். அதன்​பின் அலு​வல் ஆய்​வுக் குழு​வில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. பின்பு சட்​டப்​பேரவை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்தி வைக்​கப்​பட்​டது.

இதையடுத்து நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பட்​ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தாக்​கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்​தது. அதற்​கேற்ப பட்​ஜெட் தயாரிப்பு பணி​கள் ஏற்​கெனவே முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய புதிய திட்​டங்​கள், ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களின் முன்​னேற்​றம், பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள் உள்​ளிட்​டவை குறித்து முதல்​வர் விஜய் தலை​மை​யில் கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறை​கள் வாரி​யான ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தக் கூட்​டங்​கள் ஜூலை 28-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன.

இதைத்​தொடர்ந்து பட்​ஜெட் தாக்​கல் செய்​வது தொடர்​பாக அமைச்​சர​வைக் கூட்​டம் சென்னை முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் கடந்த ஜூலை 16-ம் தேதி நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தில் பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய சிறப்​பம்​சங்​கள், தேர்​தல் வாக்​குறு​தி​களில் உடனே நிறைவேற்​றக் கூடிய அறி​விப்​பு​கள், மகளிர் உரிமைத்​தொகை உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டன. அவற்​றில் சில திட்​டங்​களுக்கு ஒப்​புதல் பெறப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. மேலும், பட்​ஜெட் கூட்​டத் தொடருக்கு அமைச்​சர்​கள் முழு​மை​யாக தயா​ராகி வரவேண்டும் எனவும் முதல்​வர் விஜய் தரப்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில் தமிழக சட்​டப்​பேரவை மீண்​டும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடை​பெறும் எனவும், அன்​றைய தினம் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்பட உள்​ள​தாக​வும் அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. இதுகுறித்து சபாநாயகர் ஜேசிடி பிர​பாகர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்​றைய தினம் திருத்​தப்​பட்ட பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படும்.

அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படும். பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகு, அலு​வல் ஆய்​வுக் குழுக் கூட்​டம் நடை​பெறும். அதில் எத்​தனை நாட்​கள் சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரை நடத்​து​வது என்​பது பற்​றிய முடிவு​கள் எடுக்​கப்​படும். மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடை​பெறும். மேலும், சட்​டப்​பேரவை நிகழ்​வு​களை முழு​மை​யாக நேரலை செய்ய அறி​வுறுத்தி உள்​ளோம்.

எம்எல்ஏ கைது விவகாரம்: ஒரு எம்​எல்​ஏவை சட்​டப்​பேரவை எல்​லைக்கு உட்​பட்ட இடங்​களில் கைது செய்​யும் சந்​தர்ப்​பங்​களில் மட்​டுமே சபா​நாயகரிடம் முன் அனு​மதி கேட்க வேண்​டும். சட்​டப்​பேர​வைக்கு வெளியே நடை​பெறும் சம்​பவங்​களுக்​கு, சபா​நாயகரிடம் அனு​மதி பெற்​று​தான் கைது செய்ய வேண்​டும் என்று விதி கிடை​யாது. ஒரு எம்​எல்ஏ கைது செய்​யப்​பட்​ட​வுடன், மாவட்ட கண்​காணிப்​பாளர் உடனே எனக்கு தகவல் தெரி​வித்​தார். நான் அதை மற்ற எம்​எல்​ஏ.க்​களுக்கு முறை​யாக தெரி​வித்​தேன்.

முதல்​வர் விஜய் விதி​களுக்கு உட்​பட்​டு​தான் சட்​டப்​பேர​வை​யில் சைகை செய்​தார். முதல்​வரின் கை அசைவை பார்த்து அவர் என்ன செய்​யப் போகிறார் என்​பதை புரிந்து கொண்டு அவருக்கு அனு​மதி அளித்​தேன்.இதையெல்​லாம் விதி​களுக்கு முரணானது என்று சொல்ல முடி​யாது. அதே​நேரம் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களும் என்ன சைகை செய்​யப் போகிறார்​கள் என்​பதை என்​னிடம் தெரி​வித்​தால் அனு​மதி அளிப்​பது குறித்து முடிவு செய்​வேன். இவ்​வாறு சபா​நாயகர் ஜேசிடி பிர​பாகர் தெரி​வித்​தார்.

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால் திட்​டங்​கள் அனைத்​தும் பொது​மக்​களைக் கவரும் வகை​யில் இடம்​பெறும் எனவும், மகளிர் உரிமைத் தொகை உயர்​வு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டங்​கள், புதிய தொழில் கொள்கை உள்​ளிட்ட பல்​வேறு அறி​விப்​பு​கள் இடம்​பெறலாம் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஆலோசனை: முதல்​வர் விஜய் தலை​மை​யில் மனிதவள மேலாண்மை துறை​யின் பட்​ஜெட் ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்​கள் மரிய வில்​சன், சரத்​கு​மார் மற்​றும் துறை சார்ந்த அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் அரசுத் துறை​களில் உள்ள காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. அரசின் நிதி​நிலை​யைப் பொறுத்து காலிப் பணி​யிடங்​களை முன்​னுரிமை அடிப்​படை​யில் நிரப்​ப​வும், அரசு ஊழியர்​களுக்​கான பயோ மெட்​ரிக் வரு​கைப் பதிவை விரி​வாக்​கம் செய்​ய​வும் முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​ய​தாக தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

2026 - 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்
டெல்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in