தமிழகம்

தமிழக காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு

முதன்முறையாக பெண் தலைவர்களாக 4 பேர் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்​கிரஸில் மொத்​தம் உள்ள 77 மாவட்ட தலை​வர்​கள் பதவி​களில் 71 மாவட்​டங்​களுக்​கான தலை​வர்​களை அகில இந்​திய காங்​கிரஸ் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. இதில் முதன்​முறை​யாக 4 பெண் தலை​வர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

தமிழக காங்​கிரஸில் புதிய மாவட்ட தலை​வர்​களை தேர்வு செய்ய அகில இந்​திய காங்​கிரஸ் முடிவு செய்​தது. அதற்​காக பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த மூத்த காங்​கிரஸ் தலை​வர்​கள் 38 பேரை மாவட்ட பார்​வை​யாளர்​களாக நியமித்து தலா 2 பேரை பரிந்​துரைக்க அறி​வுறுத்தி இருந்​தது. அந்​தந்த மாவட்​டங்​களில் ஆய்வு நடத்​தப்​பட்டு பல்​வேறு அம்​சங்​களை ஆராய்ந்​து, தலா 2 பேர் பரிந்​துரை செய்​யப்​பட்​டனர்.

தனைத் தொடர்ந்​து, தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சிக்க டெல்லி சென்ற முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்​டோர் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி, 71 மாவட்ட தலை​வர்​கள் பட்​டியலை இறு​தி​செய்​து, நேற்று முன்​தினம் கே.சி.வேணுகோ​பால் வெளி​யிட்​டார்.

ரூ.15 லட்​சம் பேரம்: ஏற்​கெனவே கோவை மாவட்​டத்​தில் 3 மாவட்ட தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். கன்​னி​யாகுமரிக்கு 3 மாவட்ட தலை​வர்​கள் பதவிக்கு பெயர்​களை பரிந்​துரைக்க ரூ.15 லட்​சம் பேரம் பேசி​ய​தாக எழுந்த சர்ச்​சையை அடுத்து அந்த பதவி​களுக்​கான அறி​விப்பு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள 71 பேரில், ப.சிதம்​பரத்​தின் ஆதர​வாளர்​களுக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்ள​தாக கட்சி வட்​டார் தெரிவிக்​கிறது.

தமிழ்​நாடு காங்​கிரஸில் முதன் முறை​யாக 4 பெண் மாவட்ட தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​போல் வடசென்னை மேற்​கு, திருச்சி மாநகரம், திண்​டுக்​கல், வேலூர் மத்​தி​யம், தூத்​துக்​குடி தெற்​கு, செங்​கல்​பட்​டு, சிவகங்​கை, திருப்​பூர் தெற்கு ஆகிய 8 மாவட்ட தலை​வர்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், காங்​கிரஸ் நிர்​வாகி பிர​வீன் சக்​கர​வர்த்தி தனது எக்​ஸ்தளத்​தில், மாவட்ட தலை​வர்​கள் எந்​தக் கட்​சிக்​கும் அடிபணி​யாமல் கட்​சியை வலுப்​படுத்த வேண்​டும் என பதி​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT