தமிழகம்

“ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை” - நயினார் நாகேந்திரன் உறுதி

செய்திப்பிரிவு

கோவை: சென்​னை​யில் நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் தொகு​திப் பங்​கீடு குறித்து பேச​வில்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழக அரசி​யல் சூழல் தொடர்​பாக, பாஜக தேர்​தல் பொறுப்​பாளர்​களான மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் மற்​றும் அர்​ஜுன் மேக்​வால் ஆகியோர் சென்​னை​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​தினர். தொடர்ந்​து, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இந்த சந்​திப்​பில் தொகு​திப் பங்​கீடு குறித்து பேச​வில்​லை.

கள நில​வரம் குறித்து அவர்​கள் கேட்​டனர். தேர்​தலை எதிர்​கொள்ள நாங்​கள் தயா​ராக இருப்​ப​தாகத் தெரி​வித்​தோம். ஓபிஎஸ் மற்​றும் டிடி​வி.​தினகரன் ஆகியோரை தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைப்​பது தொடர்​பாக பேச​வில்​லை. கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் பெறப்​பட்ட வாக்​கு சதவீதம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

திமுகவை ஆட்​சி​யில் இருந்து அகற்ற வேண்​டும் என்​பது​தான் எங்​களது முக்​கிய நோக்​கம். எனவே​தான், ஒற்​றைக் கருத்து கொண்​ட​வர்​கள் எங்​கள் கூட்​ட​ணி​யில் இணை​ய​லாம் என்று தொடர்ந்து கூறி வரு​கிறேன். கூட்​ட​ணி​யில் யார், யாரை ஏற்​றுக் கொள்​வார்​கள் என்​பது அரசி​யல் சூழலைப் பொறுத்தே அமை​யும்.

மதுரை​யில் இந்​திரா காந்​திக்கு திமுக​வினர் கருப்​புக் கொடி காட்​டி​னார்​கள். கற்​களை வீசித் தாக்​கினர். ஆனால், 6 மாதங்​களுக்​குப் பிறகு திமுக-​காங்​கிரஸ் கூட்​டணி உரு​வானது. எனவே, அரசி​யலில் நிரந்தர நண்​பரும் இல்​லை, நிரந்தர எதிரி​யும் இல்​லை.

திமுக​வுக்கு எதி​ரான வாக்​கு​களை யார் பெறுகின்​றனர் என்​பது முக்​கி​யம். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இடம்​பெறும் கட்​சிகள் குறித்த இறுதி முடிவு ஜனவரி​யில் தெரி​யும். தேர்​தல் கருத்​துக் கணிப்​பு​கள் மாறு​பட்​டுக் கொண்டே இருக்​கும். யூகங்​கள் அடிப்​படை​யில் அவை மாறு​படும்.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பின்​னர்​தான் தமிழகத்​தில் விடியலுடன் கூடிய ஆட்சி அமை​யும். சென்​னை​யில் நடந்த கூட்​டத்​தில் தவெக தலை​வர் விஜய் குறித்து பேச​வில்​லை. இவ்​வாறு நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்​.

SCROLL FOR NEXT