| படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: ‘நடிகைகளை​யும், சினிமா தயாரிப்​பாளர்​களை​யும் சந்​திக்க ஆர்​வம் காட்​டும் முதல்​வர் விஜய், குற்​றச்​சம்​பவங்​களால் பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​திக்​காதது ஏன்?’ என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

தமிழகத்​தில் பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ராக நடக்​கும் பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​களைத் தடுக்க தவறிய​தாக, தவெக அரசைக் கண்​டித்து தமிழக பாஜக சார்​பில் சென்னை எழும்​பூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை தாங்​கி​னார்.

முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மேலிடப் பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத் தலை​வர் டால்​பின் ஸ்ரீதர், மாநிலச் செய​லா​ளர்​கள் கராத்தே தியாக​ராஜன், சதீஷ்கு​மார், வினோஜ் பி.செல்​வம் மற்​றும் அர்​ஜுனமூர்த்​தி, நயி​னார் பாலாஜி உள்​ளிட்ட மாநில, மாவட்ட நிர்​வாகி​கள் ஏராள​மானோர் கலந்து கொண்​டனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் தொடர்ந்து நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கின்​றன.

அதி​லும், சட்​டப்​பேரவை உறுப்​பினர், அமைச்​சர்​களாக இருக்​கக்​கூடிய எல்​லோருட​னும், இன்று பெண்​கள் உடல்​ரீ​தி​யாக​வும், உணர்​வுரீ​தி​யாக​வும் தாக்​குதலுக்கு உள்​ளாக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தப் போக்கை தவெக அரசு உடனடி​யாகக் கண்​டிக்க வேண்​டும். இல்​லை​யெனில் பதவியை விட்டு விலக வேண்​டும்.

பாலியல் குற்​றச்​சம்​பவங்​களால் பாதிக்​கப்​பட்ட பெண்​களை நேரில் சென்று சந்​திக்​கத் தவறிய தமிழக முதல்​வர் விஜய், நடிகைகளை​யும் திரைப்​படத் தயாரிப்​பாளர்​களை​யும் சந்​திப்​ப​தில் ஆர்​வம் காட்டி வரு​கிறார்.

இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு நீங்​களும் ஒரு காரணம். இதுதொடர்​பான சிபிஐ விசா​ரணை இன்​னும் நிலு​வை​யில் இருப்​பதை மறந்​து​விடக் கூடாது.

பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆறு​தல் கூறக்​கூட முன்​வ​ராத முதல்​வர், அடுத்த கட்​சிகளை அழிப்​ப​திலேயே குறி​யாக இருக்​கிறார். பாஜக வலு​வான சித்​தாந்​தத்​தின் அடிப்​படை​யில் உரு​வான இயக்​கம்.

உத்​தரப்​பிரதேச முன்​னாள் முதல்​வர் கல்​யாண் சிங், உமா பாரதி போன்ற பெரும் தலை​வர்​கள் கட்​சியை விட்டு வெளி​யேறிய போதும், பாஜக எந்​தப் பாதிப்​பும் அடைய​வில்​லை. யார் வெளியே போனாலும் சரி, இந்த கட்​சியை ஆட்​ட​வும், அசைக்​க​வும் முடி​யாது.

கட்​சியி​லிருந்து வெளியே சென்​றவர்​கள் இன்று மீண்​டும் திரும்பி வந்து கொண்​டிருக்​கிறார்​கள். யார் கட்​சிக்கு வந்​தா​லும் அவர்​களைத் தாயுள்​ளத்​தோடு வரவேற்க பாஜக தயா​ராக இருக்​கிறது. அவர்​களுக்கு உரிய பொறுப்​பு​கள் வழங்​கப்​படும். தவெக ஆட்​சிக்கு முடிவுரை எழுதும்​வரை பாஜக​வின் போராட்​டம் ஓயாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT