இரா.முத்தரசன் | கோப்புப் படம். 
தமிழகம்

கம்யூனிஸ்ட்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் அமைச்சரவையே இருக்காது: இரா.முத்தரசன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: கம்​யூனிஸ்ட்​கள் ஆதரவை வாபஸ் பெற்​றால், தவெக அமைச்​சர​வையே இருக்​காது என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.​முத்​தரசன் தெரிவித்​தார்.

சென்னை பாடி​யில் செய்​தி​யாளர்​களிடம் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முன்​னாள் மாநில செய​லா​ள​ரும், மூத்த தலை​வரு​மான இரா.​முத்​தரசன் கூறிய​தாவது: அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு எங்​கள் மீது ஏன் திடீரென கோபம் வந்​தது என்று தெரிய​வில்​லை. சட்​டப்​பேர​வை​யிலும் சரி, சட்​டப்​பேர​வைக்கு வெளி​யிலும் சரி முதல்​வர் விஜய்​யும், தவெக அமைச்​சர்​களும் பிரச்​சினை​களை திசை திருப்​பு​கின்​றனர்.

சட்​டப்​பேர​வை​யில் ஒரு உறுப்​பினர் கேள்வி எழுப்​பி​னால், அதற்கு முதல்​வரும், அமைச்​சர்​களும் பதிலளிக்க வேண்​டும். அதற்கு மாறாக திசை திருப்பி பேசுவ​தால் எந்த பயனும் ஏற்​ப​டாது. இவ்​வாறு பிரச்​சினை​களை திசை திருப்​புவ​தால், எந்த பிரச்​சினை​யும் தீர்ந்​து​வி​டாது.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கூறும் இடது​சாரி கட்​சிகளின் தயவால் தான் இந்த ஆட்சி நடந்து கொண்​டிருக்​கிறது. சிபிஐ, சிபிஎம் கட்​சிகள் தவெக ஆட்​சிக்கு அளித்​திருக்​கும் ஆதரவை வாபஸ் வாங்​கி​விட்​டால், அமைச்​சர​வையே இருக்​காது. இதற்​காக தான் ஆளுநரும் எதிர்​பார்த்து கொண்​டிருக்​கிறார். எப்​போது கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் மாநில செய​லா​ளர்​கள் வாபஸ் வாங்​கு​தாக அறி​விப்​பார்​கள் என்று காத்துக் கொண்​டிருக்​கிறார். எனவே, அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா இதை உணர்ந்து பேச வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT