தமிழகம்

சட்​டப்​பேர​வை​யில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்​டும்: தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்​கெடுப்பு

அதி​முக​வில் ஒரு அணி எம்​எல்​ஏ.க்​கள் ஆதரவு அளிக்க முன்​வந்​திருப்​ப​தால் மகிழ்ச்​சி​யில் விஜய்

செய்திப்பிரிவு

சென்னை: புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு சட்​டப்​பேர​வை​யில் இன்று (மே 13) நடை​பெறுகிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம்​(தவெக) 108 தொகு​தி​களில் வெற்​றி பெற்​றது. தனிப் பெரும்​பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய திமுக கூட்​டணி கட்​சிகளிடம் விஜய் ஆதரவு கோரி​னார். அதில் 5 எம்​எல்​ஏக்​களை கொண்ட காங்​கிரஸ், திமுக கூட்​ட​ணியை முறித்து கொண்டு தவெக​வுக்கு ஆதரவு அளித்​தது.

மேலும் தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிப்​ப​தாக தலா 2 எம்​எல்​ஏக்​களை கொண்ட இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் ஆகிய கட்​சிகள் அறி​வித்​தன. இதன்​மூலம் தவெக​வின் பலம் 120-ஆக உயர்ந்​தது. ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை எண்​ணிக்கை கிடைத்​த​தால் கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்றார். 9 அமைச்​சர்​களும் பதவி ஏற்​றனர். அதைத் தொடர்ந்து சட்​டப்​பேரவை தற்​காலிக தலை​வ​ராக கருப்​பையா நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் உட்பட 233 எம்​எல்​ஏக்​கள் பதவி​யேற்​றுக் கொண்​டனர்.

2-வது நாளான நேற்று சட்​டப்​பேர​வை​யின் நிரந்தர தலை​வர் மற்​றும் துணைத் தலை​வரை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. தவெக சார்​பில் பேர​வைத் தலை​வர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி எம்​எல்​ஏ​வான ஜேசிடி பிர​பாகரும், துணைத்​தலை​வர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்​எல்​ஏ​வான ரவிசங்​கரும் போட்​டி​யின்றி தேர்​வாகி பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

இந்​நிலை​யில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு தனது பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில் மே 13-ம் தேதிக்​குள் (இன்​று) நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகர் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் தீர்​மானம் சட்​டப்​பேர​வை​யில் இன்று கொண்டு வரப்​பட்டு வாக்​கெடுப்பு நடை​பெற உள்​ளது.

இதற்​கிடையே, இரு தொகு​தி​களில் வெற்றி பெற்​ற​தால் திருச்சி கிழக்​கில் முதல்​வர் விஜய், ராஜி​னாமா செய்​து​விட்​டார். மேலும், திருப்​பத்​தூரில் ஒரு ஓட்​டில் வென்ற தவெக எம்​எல்ஏ சீனி​வாச சேதுபதி வாக்​கெடுப்​பில் பங்​கேற்க உயர்​நீ​தி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதனால் தவெக வெற்​றி​பெற்ற 108 தொகு​தி​களில் கையில் 106 எம்​எல்​ஏக்​கள் தான் இருக்​கின்​றனர். தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்​துள்ள காங்​கிரசிடம் 5, விசிக, இந்​திய கம்​யூ. மார்க்​சிஸ்ட், ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளிடம் தலா 2 வீத​மாக 8 இடங்​கள் என மொத்​தம் 119 இடங்​கள் உள்​ளன. இதன்​மூலமே தவெக​வுக்கு பெரும்​பான்​மைக்கு தேவை​யான இடங்கள் கிடைத்து​ விட்​டன.

இதுத​விர தவெக​வுடன் கூட்​டணி அமைத்​து, பெரும்​பான்​மையை நிருபிப்​ப​தில் விஜய்க்​கு, அதி​முக​வில் சி.​வி.சண்​முகம், எஸ்.பி.வேலுமணி தலை​மையி​லான ஒருதரப்பு எம்​எல்​ஏக்​கள் ஆதர​வளிப்​ப​தாக அறி​வித்​துள்​ளனர். அந்த அணி​யில் சுமார் 30 எம்​எல்​ஏக்​கள் வரை உள்​ள​தாக கூறப்​படு​கிறது. அதே​போல், அமமுக​வின் எம்​எல்ஏ காம​ராஜ், தவெகவை ஆதரிப்​ப​தாக சட்​டப்​பேர​வை​யில் வெளிப்​படை​யாக அறி​வித்​து​விட்​டார். தவெக​வுக்கு ஆதரவு பலம் 150 வரை இருப்​ப​தால் பெரும்​பான்​மையை நிரூபித்து ஆட்​சியை தக்​கவைப்​ப​தில் விஜய்க்கு சிக்​கல் இருக்​காது என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

திமுக புறக்​கணிப்​பு? - ஆட்​சியை தக்க வைப்​ப​தற்கு தேவை​யான பெரும்​பான்மை பலம் தவெக​வுக்கு இருப்​ப​தால் வாக்​கெடுப்பை புறக்​கணிக்க திமுக, அதி​முக​வில் இபிஎஸ் தரப்​பு, பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்துள்ளன.

SCROLL FOR NEXT