தமிழகம்

‘முதல்வர் மருந்தகங்கள்’ மாநிலம் முழுவதும் விரிவாக்கம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கிராமப்புறங்களிலும் மானிய விலையில் நாப்கின்கள்

செய்திப்பிரிவு

சென்னை: ‘கி​ராமப்​புறங்​களி​லும் மானிய விலை​யில் நாப்​கின்​கள் கிடைக்​கும் வகை​யில் ‘முதல்​வர் மருந்​தகங்​கள்’ திட்​டம் தமிழகம் முழு​வதும் விரிவுபடுத்​தப்​படும்’ என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தாம்​பரம் வழக்​கறிஞர் லட்​சுமி ராஜா என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனு​வில், “ஏழை, எளிய கிராமப்​புற பெண்​களும் பயன்​பெறும் வகை​யில் ரேஷன் கடைகளில் நாப்​கின்​களை மானிய விலை​யிலோ அல்​லது இலவச​மாகவோ வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

          

இந்த வழக்​கில் தமிழக அரசு தரப்​பில், கிராமப்​புற பெண்​களுக்கு கிராம சுகா​தார செவிலியர்​கள் மூல​மாக​வும், பள்ளி மாண​வியர் மற்​றும் பிரச​வித்த இளம் தாய்​மார்​களுக்கு இலவச​மாக​வும் நாப்​கின்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன்​மூலம் பெரும்​பாலான பெண்​கள் பயன் அடைந்து வரு​வ​தாக ஏற்​கெனவே தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கு முந்​தைய தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா தலை​மையி​லான அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, “தமிழகத்​தில் கூட்​டுறவு சங்​கங்​கள் மூல​மாக 1000 ‘முதல்​வர் மருந்​தகங்​கள்’ தொடங்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் மானிய விலை​யில் நாப்​கின்​கள் விற்​கப்​படு​கின்​றன. கிராமப்​புறங்​களில் உள்​ளவர்​களுக்​கும் மானிய விலை​யில் நாப்​கின்​கள் கிடைக்​கும் வகை​யில் ‘முதல்​வர் மருந்​தகங்​கள்’ திட்​டம் தமிழகம் முழு​வதும் விரிவுபடுத்​தப்​படும்” என்​றார்.

அதையடுத்​து, இந்த மருந்​தகங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டுமென அரசுக்கு அறி​வுறுத்​திய நீதிப​தி​கள், விசா​ரணையை ஏப்​.29-க்கு தள்​ளி​வைத்​துள்​ளனர். அன்​றைய தினம், கூடு​தலாக தொடங்​கப்​பட்​டுள்ள முதல்​வர் மருந்​தகங்​கள் குறித்த விவரங்​களை அரசு தெரி​விக்​கும் என எதிர்​பார்ப்​ப​தாக​வும் நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT