தமிழகம்

பேரவையில் மக்கள் பிரச்சினையை சுட்டிக்காட்டாததால் திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஸ்டாலின் அதிருப்தி

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் மக்​கள் பிரச்​சினை​களைச் சுட்​டிக்​காட்​டாத​தால், திமுக உறுப்​பினர்​கள் மற்​றும் முன்​னாள் அமைச்​சர்​கள் மீது மு.க.ஸ்​டா​லின் கடும் அதிருப்​தி​ அடைந்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்து திமுக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆக.5-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் பல்​வேறு முக்​கி​யத் தீர்​மானங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

இதற்​கிடையே சட்​டப்​பேரவை விவாதங்​களின்​போது திமுக உறுப்​பினர்​களின் செயல்​பாடு​கள் திருப்​தி​கர​மாக இல்லை என கட்சித் தலை​வர் ஸ்​டா​லின் கருதுகி​றார். குறிப்​பாக நேற்று முன்​தினம் திமுக முன்​னாள் அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​களின் செயல்​பாடு​கள் மீது அவர் கடும் அதிருப்​தி​யில் இருக்​கி​றார்.

இதுதொடர்​பாக, முக்​கிய முன்​னாள் அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​களை நேரில் அழைத்து கண்​டித்​துள்​ளார். அப்​போது, தவெக அரசின் செயல்​பாடு​கள் மற்​றும் குறை​பாடு​களை வலு​வான ஆதா​ரங்​களு​டன் விமர்​சிப்​ப​தற்​குப் பதிலாக, அவை​யில் தனிப்​பட்ட விஷ​யங்​கள் குறித்​துப் பேசி நேரத்தை வீணடிப்​ப​தாக கண்டிப்புடன் ஸ்டா​லின் தெரி​வித்​துள்ளார்.

​பேரவை கூட்​டத்​தொடரில் திமுக சார்​பில் பேச முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், முன்​னாள் அமைச்​சர்​களான தங்​கம் தென்​னரசு, எம்ஆர்கே பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோரை ஸ்​டா​லின் ஏற்​கெனவே நியமித்​திருந்​தார். அவர்​களின் செயல்​பாட்​டிலும் தலை​மைக்கு திருப்தி இல்லை எனக் கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, பட்​ஜெட் விவாதத்​தின்​போது பேசிய முன்​னாள் அமைச்​சர் எம்ஆர்கே பன்​னீர்​செல்​வம், எதிர்க்​கட்​சித் துணைத் தலை​வ​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான கே.என்​. நேருவை ‘1,000 ஏக்​கர் நில​மும் ஏராள​மான கால்​நடைகளும் வைத்​துள்ள பெரிய விவ​சா​யி’ எனக் குறிப்​பிட்​டது அவை​யில் சிரிப்​பலையை ஏற்​படுத்​தி​யது.

இது​போன்ற நகைச்​சுவைப் பேச்​சுகளைத் தவிர்த்​து, விவா​திக்​கப்​படும் மக்​கள் பிரச்​சினை​களில் முழு கவனம் செலுத்த வேண்​டும். தவெக அரசின் குறை​பாடு​களை துல்​லிய​மாக சுட்​டிக்​காட்ட வேண்​டும் என்று ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சட்​டப்​பேரவை நடவடிக்​கை​கள் அனைத்​தும் தொலைக்​காட்​சியில் நேரலை​யாக ஒளிபரப்​பப்​படு​கின்​றன. இதை லட்​சக்​கணக்​கானோர் பார்க்கின்றனர்.

இந்த சூழலில் அவை​யில் நகைச்​சுவை​யாக​வும், தேவையற்ற வகை​யிலும் பேசுவ​தால் என்ன பயன்? மக்​களுக்​குப் பயன்​படும் முக்​கிய நலத்​திட்​டங்​கள், கோரிக்​கை​களை மட்​டுமே வலு​வாக வலி​யுறுத்​திப் பேச வேண்​டும்.

தவெக அமைச்​சர்​களுக்​கு சரி​யான பதிலடி கொடுக்​கும் வகை​யில் கேள்வி கேட்க வேண்​டும். அநாவசிய பேச்​சுகளை முற்​றிலும் தவிர்க்க வேண்​டும் என அவர்​ அறி​வுறுத்​தி உள்ள​தாக​ கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT