தயாமலர் ஸ்டீபன்

 
தமிழகம்

கேரளாவைப் போல தமிழகத்திலும் பூர்வீக அட்டை வழங்க சிறுபான்மை மக்கள் நல கட்சி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கேரளாவைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் அனைத்து குடிமக்​களுக்​கும் பூர்​வீக அட்டை அல்​லது குடி​யிருப்​போர் அட்​டையை தமிழக அரசு வழங்க வேண்​டும் என்று சிறுபான்மை மக்​கள் நல கட்சி வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்​து, சென்​னை​யில் நிருபர்​களிடம் அக்​கட்சி மாநில ஒருங்​கிணைப்​பாளர் தயாமலர் ஸ்டீபன் நேற்று கூறிய​தாவது: இந்​தி​யா​வில் கிறிஸ்​தவர் மீது திட்​ட​மிட்ட அச்​சுறுத்​தல்​களும், வன்​முறை​களும் கட்​ட​விழ்த்து விடப்​பட்​டன.

டிசம்​பரில் நடந்த தாக்​குதல்​கள் தற்​செய​லானவை அல்ல. எங்​கள் வழி​பாட்​டுத் தலங்​கள், கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் கேரல் பாடும் எங்​கள் குழந்​தைகளைக் குறி​வைத்து நடத்​தப்​பட்ட திட்​ட​மிட்ட தாக்​குதல்​களாகும்.

வாக்​காளர் பட்​டியலின் சிறுப்​புத் தீவிர திருத்​தம் என்​பது சிறுபான்மையினரை அந்​நியப்​படுத்​து​வதற்​கான ஒரு ஆயுத​மாகும். சிறுபான்மையினரை வடிகட்​டு​வதற்​காக வடிவ​மைக்​கப்​பட்ட தேசிய குடிமக்​கள் பதிவேட்​டின் முன்​னோட்​டம் என்று அஞ்​சுகிறோம்.

எங்​களுக்கு மாநில அரசுகள் கேடய​மாக இருக்க வேண்​டும். கேரள அரசு அறி​முகப்​படுத்​தி​உள்ள பூர்​வீக அட்டை அல்​லது நேட்​டி​விட்டி கார்டு திட்​டம்​போல தமிழகத்​தி​லும் அனைத்​துக் குடிமக்​களுக்​கும் தமிழக அரசு வழங்க வேண்​டும்.

எதிர்​காலத்​தில் என்​ஆர்சி அல்​லது சிஏஏ மூல​மாக, சிறுபான்மையினரின் குடி​யுரிமை​யைப் பறிக்க முயற்​சிக்​கும்​போது, மாநில அரசு வழங்​கும் இந்த அட்டை ஏழைகளுக்​கும், சிறுபான்மையினருக்கும் முக்​கிய பாது​காப்​பாக அமை​யும்.

வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பணி​களை தமிழக அரசு உன்​னிப்​பாக கவனிக்க வேண்​டும். தொழில்​நுட்​பக் காரணங்​களுக்​காக வாக்​காளர்​கள், குறிப்​பாக பெண்​கள் மற்​றும் சிறுபான்மையினர் நீக்​கப்​படு​வதை தடுத்து நிறுத்த வேண்​டும்.

கிறிஸ்​தவர்​களுக்கு எதி​ரான வன்​முறை​கள் தமிழகத்​துக்​குள் நுழை​யாத​படி, தேவால​யங்​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​களுக்கு சிறப்பு பாது​காப்பு அளிக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT