மதுரை: மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரான பின்னர், முதல் முறையாக நேற்று விஸ்வநாதன் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரேவற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, கடந்த காலங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அணை கட்டும் முயற்சியைகர்நாடக மாநில அரசு நிறுத்த வேண்டும். தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் அமைச்சர் என்ற முறையில் நானும், முதல்வரும் தெளிவாக உள்ளோம்.
நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர் ராகுலின் நிலைப்பாடு. கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் ஆளுநரின் தலையீடு இருந்தது.
எங்கள் அரசு ஆளுநருடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு, கல்வித்துறைக்கு தேவையானதை செய்வோம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலவும் குளறுபடிகள் தீர்க்கப்பட்டு தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்படும். இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.