தமிழகம்

2.11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் மழை​யால் 2.10 லட்​சம் ஏக்​கர் பரப்​பளவி​லான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்​துள்​ள​தாக​வும் ஹெக்​டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்​பீடு வழங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக​வும் அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர். ராமச்​சந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை, சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் பெய்​து​வரும் மழை மற்​றும் டிட்வா புயல் பாதிப்​பு​கள் குறித்து எழில​கத்​தில் உள்ள மாநில பேரிடர் கட்​டுப்​பாட்டு மையத்​தில் வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர். ராமச்​சந்​திரன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: டிட்வா புயல் காரணமாக நாளை (இன்​று) காலை வரை மழை விட்​டு​விட்டு பெய்​யும் எனவானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

நாளை காலை இந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டல, ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாக மாற வாய்ப்​புள்​ளது. அப்​படி மாறும் பட்​சத்​தில் மாமல்​லபுரத்​தில் இருந்து தமிழகத்​தின் உள்​பகு​தி​கள் வழி​யாக செல்​லக்​கூடும்.

தமிழகத்​தில் முதல்​கட்ட கணக்​கின்​படி, 2.11 லட்​சம் ஏக்​கர் (85,521 ஹெக்​டேர்) பரப்​பளவி​லான பயிர்கள் நீரில் மூழ்​கி​யுள்​ளன. மழைநீர் வடிந்த பிறகு சரி​யான கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு நிவாரணம் வழங்​கப்​படும். மழை பாதிப்​பால் இது​வரை 4 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இது​வரை, 582 கால்​நடைகள் இறந்​துள்​ளன. 1,601 குடிசை வீடு​கள் சேதமடைந்​துள்​ளன. பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்​வாகம் கணக்​கெடுத்து வரு​கிறது. கடந்த அக்​டோபரி்ல் பெய்த மழை​யால் பாதிக்​கப்​பட்ட வேளாண் பயிர்​களுக்கு ஹெக்​டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்​க முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார்.

மழை பாதிப்​பையொட்டி மொத்​தம் 54 நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டு, 3,534 பேர் தங்​கவைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்​கு தேவை​யான உணவு, உடை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT