வேலூர் விஐடி பல்கலை.யில் நேற்று தொடங்கிய 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், அமெரிக்காவின் எம்ஐடி கல்வி நிறுவனப் பேராசிரியர் மவுங்கி பவெண்டி, விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதம்

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழக அரசு உயர்​கல்​வி, ஆராய்ச்​சியை மேம்​படுத்தி வரு​வ​தாக போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்​கலைக்கழகத்தில் 3-வது சர்​வ​தேச நானோ அறி​வியல் மற்​றும் நானோ தொழில்​நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது.

இதில் பங்​கேற்ற அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் பேசி​ய​தாவது: நானோ தொழில்​நுட்​பத்​தில் முன்​னிலை வகிக்​கும் நாடு​கள்​தான், வருங்​கால தொழில்​துறை​யில் முன்​னிலை வகிக்​கும். திறன்​மிகு பேட்​டரி​கள், சூரிய ஒளி தொழில்​நுட்​பங்​கள், அடுத்த தலை​முறை ஹைட்​ரஜன் அமைப்​பு​களில் நானோ தொழில்​நுட்​பம் முக்​கியப் பங்​காற்​றும்.

திரா​விட மாடல் அரசு சமூக நீதி​யைப் பொருளா​தார வளர்ச்​சி​யுடன் இணைக்​கிறது. தமிழகத்தை நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 2-ம் இடத்​துக்கு கொண்டு சென்​றுள்​ளது. விலை​யில்லா பேருந்து பயணத் திட்​டம் மூலம் தற்​போது தின​மும் 57.81 லட்​சம் பெண்​கள் பயனடைகின்​றனர்.

இது​வரை 841 கோடி பயணங்​களை மேற்​கொண்​டுள்​ளனர். இந்த திட்​டத்தை ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாடகா போன்ற மாநிலங்​களும் பின்​பற்​றுகின்​றன. நான் முதல்​வன், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் உள்​ளிட்ட திட்​டங்​களால் 4.18 லட்​சம் மாணவி​களும், 3.28 லட்​சம் மாணவர்​களும் பயனடைகின்​றனர்.

இதன்மூலம் உயர்​கல்வி கிடைப்​பதுடன், இடைநிற்​றல் குறைந்​துள்​ளது. திரா​விட மாடல் அரசு உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்​சியை மேம்​படுத்​தும் நடவடிக்​கை​களில் தொடர்ந்து ஈடு​படும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, “இந்த மாநாட்​டில் 20 நாடு​களைச் சேர்ந்த 300 பேர் மற்​றும் 42 சர்​வ​தேச கல்வி நிறு​வனங்​களைச் சேர்ந்த பேராசிரியர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

மேம்​பட்ட நானோ பொருட்​கள், நானோ எலெக்ட்​ரானிக்ஸ் மற்​றும் குவாண்​டம் பொருட்​கள், நானோ மருத்​து​வம், சென்​சார்​கள் மற்​றும் பயோசென்​சார்​கள், ஆற்​றல் பொருட்​கள் மற்​றும் நிலை​யான தொழில்​நுட்​பப் பயன்​பாடு​கள் உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​களில் கருத்​தரங்​கு​கள், சொற்​பொழி​வு​கள், விவாத அரங்​கு​கள் நடை​பெறும். மேலும், ஆராய்ச்​சி​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

அண்​மை​யில் வெளி​யான க்யூ.எஸ். நிலைத்​தன்மை பிரி​வில் தரவரிசைப் பட்​டியலில் இந்​திய அளவில் விஐடி 7-ம் இடத்​தைப் பிடித்​துள்ளது. உலக அளவில் 352-ம் இடத்துக்கு முன்​னேறி உள்​ளது” என்​றார். நோபல் விஞ்​ஞானி​யும், அமெரிக்​கா​வின் எம்​ஐடி கல்வி நிறு​வனத்​தின் பேராசிரியரு​மான மவுங்கி பவெண்டி பேசும்​போது, “நானோ அறி​வியலில் புதிய அறி​வியல் பண்​பு​களை கண்​டு​பிடிப்​பது, வேறு​பட்ட பயன்​பாடு​களு​டன் புதிய பொருட்​களைக் கண்​டு​பிடிப்​பது மாநாட்​டின் நோக்​க​மாகும்” என்​றார்.

நிகழ்​வில், விஐடி துணைத் தலை​வர் சேகர் விசுவ​நாதன், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டாரெட்​டி, துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக், நானோ அறி​வியல்​ மைய இயக்​குநர்​ நிர்​மலா கிரேஸ்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT