அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம் 
தமிழகம்

அதிமுகவில் முன்கூட்டியே விருப்ப மனு வாங்குவது ஏன்? - அமைச்சர் ரகுபதி ‘அடடே’ விளக்கம்

செய்திப்பிரிவு

அ​தி​முக​வில் முன்​கூட்​டியே விருப்ப மனு வாங்​கு​வது ஏன் என்​பது குறித்து மாநில இயற்கை வளங்​கள் துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி கருத்து தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்ஷா ஆகி​யோர் தமி​ழ​கத்​துக்கு அடுத்​தடுத்து வரு​வ​தாகச் கூறுகி​றார்​கள். தேர்​தலில் அவர்​கள் செலுத்​தும் வைப்​புத் தொகை​யைத் திரும்​பப் பெற, அவர்​கள் படையெடுத்து வந்​து​தான் ஆக வேண்​டும். பிஹாரைப் போல தமி​ழ​கம் இருக்​காது.

தமி​ழ​கத்​துக்கு எந்த நிதி​யை​யும் கொடுக்க பிரதமரும், உள்​துறை அமைச்​சரும் வரப் போவ​தில்​லை. இங்​கிருந்து எடுத்து பிற மாநிலங்​களுக்கு கொடுக்​கத்​தான் வரு​கி​றார்​கள். மருத்​து​வத் துறை​யில் சொந்த தொகு​தி​யில் கூட உபகரணங்​களை வாங்​கிப் போடாதவர் முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர். ஆனால், திமுக ஆட்​சி​யில் மருத்​து​வத் துறை​யில் பல விருதுகளைப் பெற்று சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறது.

முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். அதிமுக​வில் ஆள் இருக்​கி​றார்​களா என்​பதை பார்க்​க​வும், கட்​சியை விட்டு யாரும் சென்று விடக்​கூ​டாது என்​ப​தற்​காக​வுமே தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​கான விருப்ப மனுவை அவர்​கள் முன்​கூட்​டியே வாங்​கு​கி​றார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT